திமுக தலைவர் கருணாநிதி, ஒன்றரை ஆண்டுகளாக பேச முடியாமல் ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த 24-ம் தேதி மாலை அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டியிலேயே, மருத்துவக் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. கருணாநிதியின் மகனும், திமுகவின் செயல் தலைவருமான ஸ்டாலின், 'தலைவர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. விரைவில் பூரண குணமடைவார்' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கோபாலபுரம் வந்து ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்து செல்கின்றனர். அதேசமயம், திமுக தொண்டர்கள் கோபாலபுரம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். சென்னை கோபாலபுரத்தின் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவிற்கு தொண்டர்கள் குவிந்துள்ளனர். தீவிர உடன்பிறப்புகள் கண்ணீர் விட்டு அழுவதையும் பார்க்க முடிந்தது. தங்கள் தலைவர் மீண்டும் வந்து கம்பீர குரலோடு உரையாற்ற மாட்டாரா? என்ற ஏக்கத்துடன் கோபாலபுரம் வாசலில் காத்துக் கிடக்கின்றனர்.
அதுகுறித்த ஒரு புகைப்படத் தொகுப்பு இதோ,