பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘நாச்சியார்’ படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை எதிர்த்து இந்து மக்கள் கட்சி சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாலா இயக்கத்தில் இன்று ரிலீஸாகியுள்ள படம் ‘நாச்சியார்’. ஜோதிகா, ஜீ.வி.பிரகாஷ் குமார், இவானா, ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைத்துள்ளார்.
‘நாச்சியார்’ படத்தில், ‘கோயிலும் குப்பை மேடும் ஒண்ணு தான்’ என ஜோதிகா பேசுவது போல் ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது. இந்துக் கோயில்களை அவமதிக்கும் இந்த வசனத்தை நீக்கக்கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வசனத்தைப் பேசிய ஜோதிகா மற்றும் படத்தை இயக்கிய பாலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
‘நாச்சியார்’ படத்தின் விமர்சனத்தைப் படிக்க ‘க்ளிக்’ செய்க.