சென்னை காவலர் மணிகண்டன் தற்கொலை : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு வயது 26. இன்று அதிகாலை அவரின் நண்பர்களுடன் தன்னுடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்.
பிறந்த நாளன்று சென்னை காவலர் மணிகண்டன் தற்கொலை
பின்பு அதிகாலையில் துப்பாக்கியால் தன்னையே சுட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். இதனால் அவரின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த சம்பவம் சென்னை கீழ்பாக்கம் ஏ.டி.ஜி.பி அலுவலகத்தில் நடைபெற்றத்தால், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மணிகண்டன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சமீபமாக காவல்த்துறையில் இருக்கும் காவலர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலைகள் செய்து கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தம் ஏதாவது இருப்பின் அதனை நேரடியாக தங்களின் மூத்த அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது காவல்த்துறை.