தமிழக அரசு களிமண்ணால் ஆன அடுப்பையும் புது பானையும் கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு பானை, அடுப்புடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொங்கல் திருநாள் விழாவின்போது விவசாயிகள் நலனுக்காக தமிழக அரசு பருப்பு சக்கரை கரும்பு உள்ளிட்ட உணவு பொருட்களும் நெசவாளர்கள் நலன் காக்க வேஷ்டி சேலை கொள்முதல் செய்யும் தமிழக அரசு அழிந்து வரும் மண்பாண்ட தொழிலை காக்கவும் மண்பாண்ட தொழிலாளர்கள் நலனுக்காக அடுப்பு மட்பாண்டங்களைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
புது பானையில் பொங்கல் வைக்க களிமண்ணால் ஆன ஒரு அடுப்பும் புது பானையும் அரசு கொள்முதல் செய்து இலவசமாக தந்தால் அந்த பகுதியில் வாழையடி வாழையாக வாழ்ந்து வருகின்ற மன்பாண்டத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற முடியும். நீண்ட நாள் கோரிக்கையான இதை நிறைவேற்றும் வகையில் ஆணை பிறப்பிக்குமாறு தமிழக அரசை தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு, புதுப் பானை, புது அடுப்புடன் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"