Advertisment

சென்னை, மதுரை, நாமக்கல், தூத்துக்குடி... உஷார் மக்களே; இந்த ஏரியாக்களில் இன்று மின்தடை!

சென்னை, மதுரை, நாமக்கல், தூத்துக்குடி என பல இடங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai news

Power Supply Will Be Suspended In many Parts Of Tamilnadu on Thursday

சென்னை, மதுரை, நாமக்கல், தூத்துக்குடி என பல இடங்களில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. அதுகுறித்த முழுத் தகவல்கள் இங்கே!

Advertisment

மதுரையில் எங்கெங்கு மின்தடை?

மதுரை பசுமலை துணை மின்நிலையம் மீனாட்சி மில் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மாடக்குளம் மெயின்ரோடு, கந்தன்சேர்வை நகர், தேவி நகர், கிருஷ்ணா நகர், சபரி நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், சொரூப், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோவில், சத்திய மூர்த்தி நகர், அருள் நகர் அவர் லேடி பள்ளி, காயத்திரி தெரு, பிரித்தம் தெரு, உதயா டவர், துரைச்சாமி நகர் ஆகிய பகுதிகளில் இன்று (ஜூன்; 16) காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

அதேபோல், திருப்பாலை துணைமின் நிலையம் நாராயணாபுரம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக கண்ணனேந்தல், மகாலட்சுமி நகர், சந்தானம் நகர், பரசுராம்பட்டி, ஆத்திகுளம், பேங்க்காலனி, நாராயணபுரம், நாகனாகுளம், அங்கயற்கண்ணி காலனி. ஐலாண்டு நகர்,எம்.எம்.எஸ்.எஸ். காலனி, பாரத் நகர், கிருஷ்ணா நகர், கோபாலபுரம், திலக் நகர், அய்யர்பங்களா, ஸ்ரீநகர், சக்தி நகர், சென்ட்ரல் எக்ஸைஸ் காலனி, அய்யாவு தேவர் நகர், எழில் நகர், திருப்பாலை மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், இன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

மதுரை எல்லீஸ் நகர், துணைமின் நிலையம் டி.பி.ரோடு பீடரிலும், அண்ணா பஸ் நிலைய துணைமின் நிலையம், முனிச்சாலை பீடரிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக ரெயில்வே காலனி, சர்வோதயா அனைத்து தெருக்கள், அன்சாரி நகர் அனைத்து தெருக்கள், வைத்தியநாத புரம், டி.பி. ரோடு, சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 1 மற்றும் 2-வது தெருக்கள், எஸ்.டி.சி. ரோடு. இஸ்மாயில்புரம் 1-வது தெரு முதல் 19 தெரு வரை, கரிம்சா பள்ளிவாசல் 1-வது தெரு முதல் 5-வது தெரு வரை, முமின் பேட்டை, அருணாச்சலபுரம் 1-வது தெரு முதல் 5 வரை, ஓலை பட்டினம் 1 மற்றும் 2-வது தெருக்கள், பூந்தோட்டம் தெரு, அசன்தீன் சாய்பு சந்து, ருக்மணி பாளையம் சந்து, லட்சுமிபுரம் 8-வது மற்றும் 9-வது தெருக்கள். முனிச்சாலை ரோடு, கீழ வெளி வீதியின் ஒரு பகுதி, தென்கரை ரோட்டின் ஒரு பகுதி, ஓபுளா படித்துறை, காயிதே மில்லத்தெரு, நெல்பேட்டை, சுங்கம் பள்ளிவாசல் தெருக்கள், ஜெகஜீவன்ராம் தெரு, ஆர்.ஆர்.மண்டபம், சேவாலயம், செனாய் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

புதுக்கோட்டை

குளத்தூர் மின்விநியோக பிரிவுக்கு உட்பட்ட சந்திரகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகள், புதுக்கோட்டை மின் விநியோகப்பிரிவுக்கு உட்பட்ட அரசு நகர் மற்றும் அதன் அருகில் உள்ள பெட்ரோல் நிலைய பகுதிகளிலும். சாயர்புரம் மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட ராமசாமிபுரம், கண்ணாண்டிவிளை, வளசக்காரன்விளை, வன்னியனூர், பங்களாபகுதிகளிலும், வல்லநாடு மின் விநியோகப்பிரிவுக்கு உட்பட்ட கலியாவூர், தலைமை நீரேற்றும் நிலையம், கீழவல்லநாடு குடிநீர் சுத்தகரிப்பு மையம், திருவேங்கடநாதபுரம் சுற்றியுள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும், பழையகாயல் மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட மணிநகர், ராமச்சந்திராபுரம், முக்காணி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் பழுதடைந்த மின்கம்பம் மற்றும் தொய்வான மின்பாதையை சரி செய்யும் பணி இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டணம், ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் உபமின் நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம, ஆசிரியர் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ண நகர், திருச்செந்தூர், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டிணம், வ.உ.சி. நகர், பாளை ரோடு, ஜெயந்தி நகர், ராமசாமிபுரம், அன்பு நகர், கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிகாடு, கானம், கஸ்பா, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, கடையனோடை, கேம்பலாபாத், தேமான்குளம், திருக்களுர் ஆகிய ஊர்களுக்கு மின்சாரம் வினியோகம் இருக்காது.

செட்டியாபத்து

அதேபோல், திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட நாசரேத், சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள் மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே, விஜயராமபுரம், செட்டிகுளம், திருவரங்கநேரி, கொச்சிக்குளம், இளமால்குளம், பேய்க்குளம், பனைகுளம், திருமறையூர், மார்க்கெட் ரோடு, திரவியபுரம், வடலிவிளை, தோப்பூர், ஏழுவரைமுக்கி, உடன்குடி, செட்டியாபத்து, பரமன்குறிச்சி, சுண்டங்கோட்டை, உடைபிறப்பு, கருமாவிளை, படுக்கப்பத்து, அழகப்பபுரம், பிச்சிவிளை, வெயிலுகந்தம்மன்புரம், பூச்சிக்காடு ஆகிய பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.

நாமக்கல்

நாமக்கல் துணை மின் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை (ஜூன்:16) அன்று பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம்,கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிபட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓ காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர்

அம்பத்துார்: ஐ.சி.எப்., காலனி, கங்கை சாலை, தினேஷ் நகர், செல்லியம்மன் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில்சோத்துப்பெரும்பேடு: கம்மவார்பாளையம், தோட்டக்காரன்மேடு, ஒரக்காடு ரோடு பகுதி, காரனோடை பஜார், ஆத்துார், வி.ஜி.பி., மடு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில்பெரம்பூர்: கே.எச்., ரோடு, திருமலை ராஜா தெரு, அயனாவரம், தாகூர் நகர், வில்லிவாக்கம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில் இன்று காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment