Advertisment

கர்ப்பிணி வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்றம்: ஜன.3க்குள் அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு

அப்போது நீதிபதிகள் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai High Court

கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஹெச்.ஐ.வி. பாதித்த இரத்தம் செலுத்திய சம்பவம் தொடர்பாக சென்னை மன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இது தொடர்பாக தமிழகத்தின் அரசு ஜனவரி 3-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisment

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த குறைபாடு உடைய கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட இரத்தத்தில் ஹெச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த ரத்தம் சிவகாசியில் உள்ள அரசுரத்த வங்கியில் இருந்து பெறப்பட்டாது ஆகும். முறையான சோதனைகள் எதுவும் மேற்கொள்ளமால் மருத்துவர் இந்த இரத்தை கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தியுள்ளனர். பின்னர் நடத்திய சோதனையில் ரத்தம் செலுத்தபட்ட பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று நோய் இருப்பதாக தெரிய வந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனிடைய இந்த நிகழ்வு தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து நிலவரங்களை கேட்டு அறிந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்த அவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில்  அனுமதித்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இன்று விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் உள்ளிட்ட சிலர் முறையீடு செய்தனர். கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. பாதித்த ரத்தம் செலுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக உரிய விசாரணையை அரசு நடத்த வேண்டும். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையீடு செய்தனர்.

அப்போது நீதிபதிகள் இது தொடர்பாக ஏதேனும் மனு தாக்கல் செய்திருக்கிறார்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுக்கள் தாக்கல் செய்யவில்லை, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரினார்.

அப்போது நீதிபதிகள் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

அப்போது நீதிமன்றத்திலிருந்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், சம்பவம் தொடர்பாக அரசுத் தரப்பில் விரிவான பதிலை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளதாகவும், அது குறித்த தகவல்களை கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிப்பதாகவும் கூறினார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஜனவரி 3 ஆம் தேதி இதுதொடர்பான விரிவான பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment