டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் II-ஏ தேர்வுகளுக்கான நடைமுறையில் சில அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
இந்த இரண்டு தேர்வுகளும் இதுநாள் வரையிலும் பொது அறிவுத்தாள் கொண்ட ஒற்றைத் தேர்வாக நடத்தப்பட்டு வந்தது. (மூன்று மணி நேரங்களில் 200 கேள்விகள்) இந்த நடைமுறையை தற்போது டிஎன்பிஎஸ்கி மாற்றியுள்ளது. வரும் காலங்களில் முதல்நிலை (பரிலிம்ஸ்)மற்றும் முதன்மை (மெயின்ஸ்) கொண்ட இருநிலைகள் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிப்பது கட்டாயம்: மேலும், இனி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் (எந்த தேர்வாக இருந்தாலும் சரி ) கேட்கப்படும் மல்டிப்ல் சாய்ஸ் கேள்விகளுக்கு கட்தாயம் பதில் அளித்திருக்க வேண்டும்.
எந்தவொரு வினாவிற்கும் விடை அளிக்க இயலவில்லை/ தெரியவில்லை எனில் அதற்கு கூடுதலாக கொடுக்கப்படும் E என்ற வட்டத்தினை தேர்ந்தேடுக்கலாம். இதற்காக பிரத்தியோகமாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் E என்ற சாய்ஸ் கொடுக்கபப்டிருக்கும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆதார் கட்டாயம் - 6 முக்கிய அறிவிப்புகள்
மேலும், ஒவ்வொரு தேர்வர்களும் எத்தனை கேள்விகளுக்கு முறையே A,B,C,D மற்றும் E விடைகளை நிரப்பியுள்ளார் என்ற விவரங்களையும் தேர்வர்கள் நிரப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நேரங்களில் மாற்றம்: தேர்வர்களின் மெய்த் தன்மையை உறுதி செய்வதற்காகவும், தேர்வின் விதிமுறைகளை புரிய வைப்பதற்காகவும் இனி வரும் காலங்களில் தேர்வர்கள் 9 மணிக்கே தேர்வு மையத்துக்கு வர வேண்டும். 10 மணிக்கு மேல் வருகை தரும் தேர்வர்கள் கட்டாயம் அனுமதிக்கப் படமாட்டார்கள். தேர்வு நேரத்திகுப் பின்னர் விடைத் தாளில் பதிவு செய்யவேண்டிய கூடுதல் விவரங்களுக்காக 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும்.
நீங்கள் பட்டதாரியா? 796 பணியிடங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது : அழைக்கிறது UPSC
தெர்வரின் கைரேகைப் பதிவு: தேர்வர்களுடைய விடைத்தாளை அடையாளம் காணாத வகையில் விடைத்தாளின் விடையளிக்கும் பகுதியில் தேர்வர்களின் கையோப்பத்திற்குப் பதிலாக தெர்வரின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.