இலுப்பூரில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
8 பேர் கொண்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் 7 மற்றும் 11-ஆம் தேதி அவரது வீட்டில் சோதனை நடைபெற்று பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.