Advertisment

டெல்டா பகுதியில் பரவலாக மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை, வேலூர் பகுதிகளில் 3 மணி நேரங்களுக்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழகத்தில் மழை

தமிழகத்தில் மழை

தமிழகத்தில் மழை : சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை தொடங்கிய காரணாத்தால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Advertisment

தமிழகத்தில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

காவேரி டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நேற்று மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமன்றி டெல்டா விவசாயிகளும் அதிக அளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை, வேலூர் மாவட்டம்,  மற்றும் கொடைக்கானல் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும் படிக்க : ரெட் அலர்ட் என்றால் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள

திருவண்ணாமலை பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக ஏரி - குளங்கள் மற்றும் கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது.

வேலூர் மாவட்டம் ஆற்காடு, வாலாஜா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்திருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், மழை பெய்திருப்பதால் பொது மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment