Rain Chances in Tamil Nadu : தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல நாட்களாக கொட்டித் தீர்த்த தேர்தல் மழை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது இடியுடன் கூடிய மழை பெய்ய காத்திருக்கிறது. இதுகுறித்து, இந்திய வானிலை மையம் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "மே.24, 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. ஈரக் காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசும்.
வானிலை தகவல் குறித்த முழு தகவலையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
குறிப்பாக 26ம் தேதி தமிழகத்தில் அதிகளவு கன மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.