Advertisment

'ரஜினி மட்டும் எங்களுக்கு பலம் இல்லை' - தமிழிசை ஓபன் டாக்!

ரஜினி தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்று திருநாவுக்கரசர் ஜோசியம் சொல்கிறார்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
'ரஜினி மட்டும் எங்களுக்கு பலம் இல்லை' - தமிழிசை ஓபன் டாக்!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, "மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், ரஜினி பி.ஜே.பி-யுடன் இணையக் கூடாது என்கின்றனர். திருநாவுக்கரசர், எங்களது கட்சியைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவர், காங்கிரஸ் கட்சியையும் கொஞ்சம் கவனிக்கட்டும். அந்தக் கட்சியை அவர் வளர்க்கட்டும்.

ரஜினி தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்று திருநாவுக்கரசர் ஜோசியம் சொல்கிறார். எங்களது கட்சியைப் பலப்படுத்த, ரஜினிக்கு அழைப்பு விடுத்தோம். எங்களது விருப்பத்தை அவரிடம் நாங்கள் கூறினோம். ரஜினி வந்தால் எங்களது கட்சிக்குப் பலம். ஆனால், ரஜினி மட்டுமே பலம் இல்லை. இருப்பினும், நல்லது செய்வதற்கு கூட்டம் கூட்டுவதில் என்ன தவறு? .

மேலும், மத்திய அரசு தனது மூன்று ஆண்டுகால சாதனையை வெளியிட்டது. அதேபோல, மாநிலத்திலும் அமைச்சர்கள் தங்களது ஓராண்டு சாதனையை வெளியிட வேண்டும். அப்போதுதான், மக்களுக்கு அரசு என்ன செய்திருக்கிறது? என்ன செய்ய வேண்டும்? என்பது தெரியும்" தெரிவித்தார்.

Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment