Advertisment

ராமலிங்கம் கொலை வழக்கு: குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ.5 லட்சம்!

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் ஐந்து பேர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ராமலிங்கம் கொலை வழக்கு: குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ.5 லட்சம்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். குறிப்பாக மதமாற்றத்தை தட்டிக்கேட்டதற்காக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. கொலை வழக்கு தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேசிய புலனாய்வு முகமை (NIA)வழக்கை விசாரித்து வருகிறது.

இந்தநிலையில் 12 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரஹ்மான் சாதிக் (41) கைது செய்யப்பட்டார். தலைமறைவாக வந்த ஐந்து பேரை என்ஐஏ நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்து தேடி வருகிறது. இந்நிலையில், தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது.

Tamilnadu Thanjavur Crime
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment