Advertisment

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்: ராமநாதபுரம் கலெக்டர் அழைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 17ம் தேதி நடக்கிறது.

author-image
WebDesk
New Update
rop Insurance Awareness Vehicle

புதுச்சேரி பயிர் காப்பீடு முகாம் நாளை தொடங்கி 7ஆம் தேதிவரை நடக்கிறது.

Ramanathapuram News in Tamil: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாதந்தோறும் நடத்தப்படும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;

Advertisment

ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்ச் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 17.03.2023 அன்று காலை 10.00 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Ramanathapuram Farmers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment