தீபாவளிக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்கிட நாளை முதல் 4 நாட்களுக்கு ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ரேஷன் கடை :
நியாயவிலை கடைகளுக்கு, வழக்கமாக, விடுமுறை நாளான முதல் வெள்ளிக்கிழமை, அதாவது வருகிற 2ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மூன்றாவது வெள்ளிக் கிழமையான 16ஆம் தேதி நியாயவிலை கடைகளுக்கும் விடுமுறை நாளாகும் எனக் கூறப்பட்டுள்ளது
மேலும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு பணியாளர்கள் வெளியூர்களுக்கு செல்வதால், வரும் திங்கட்கிழமை ரேஷம் கடைகள் இயங்காது எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வரும் நவம்பர் மாதம் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
உணவுப்பொருள் வழங்கல்துறை இதுத்தொடர்பான செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.