Advertisment

டி.ஆர்.பாலு வீட்டில் கொள்ளை முயற்சி; சிசிடிவி காட்சிகள் மூலம் போலீஸ் தீவிர விசாரணை

திமுக எம்.பி., டி.ஆர்.பாலுவின் மன்னார்குடி வீட்டில் கொள்ளை முயற்சி; சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

author-image
WebDesk
New Update
டி.ஆர்.பாலு வீட்டில் கொள்ளை முயற்சி; சிசிடிவி காட்சிகள் மூலம் போலீஸ் தீவிர விசாரணை

Robbery attempt in DMK MP TR Balu’s mannargudi house: நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் மன்னார்குடி வீட்டில் கொள்ளை முயற்சி நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் டி.ஆர். பாலு. இவர் திமுகவில் பொருளாளராக உள்ளார். மேலும், இவர் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

இதேபோல இவரது மகன் டி.ஆர்.பி ராஜா 2021 சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். மேலும் டி.ஆர்.பி.ராஜா தற்போது திமுகவின் தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இந்தநிலையில், தளிக்கோட்டையில் உள்ள டி.ஆர்.பாலுவின் வீட்டில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதேபோல அவரது வீட்டின் அருகில் உள்ள கணேசன் என்பவரது வீடும் பூட்டப்பட்டு இருந்துள்ளது. கணேசன் என்பவர் லண்டனில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. வீடுகள் பூட்டப்பட்டிருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் டி.ஆர்.பாலுவின் வீட்டின் அருகே உள்ள வீட்டின் கதவின் பூட்டை உடைத்து முதலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்னர் டி.ஆர்.பாலுவின் வீட்டிற்குள் பூட்டை உடைத்து நுழைந்ததாக கூறப்படுகிறது.

இந்தக் கொள்ளை சம்பவங்கள் குறித்து புகார் வரப்பெற்ற பின் காவல் துறையினர் டி.ஆர்.பாலுவின் வீட்டிற்கு வந்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டி.ஆர்.பாலுவின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கொள்ளையர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், டி.ஆர்.பாலு வீட்டின் அருகில் உள்ள வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட  விசாரணையில் டி.ஆர். பாலு வீட்டில் பொருட்கள், பணம், நகை என எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. எனவே, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னார்குடி காவல் ஆய்வாளர் தலைமையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று  திருவாரூர் எஸ்.பி., விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment