Advertisment

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.97 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.97 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.97 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்கூட் பயணிகள் விமானம் நேற்று வந்தது. பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆண் பயணி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த நிலையில் அவரை சோதனை செய்ததில் தன்னுடைய மினி கம்யூட்டரில் மறைத்து எடுத்து வரப்பட்ட ரூ.27 லட்சத்து 42 ஆயிரத்து 688 மதிப்பிலான 494 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இதேபோல் விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 3 தங்க சங்கிலி, 1 தங்க கட்டி என மொத்தம் ரூ.70 லட்சத்து 28 ஆயிரத்து 832 மதிப்பிலான 1 கிலோ 266 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், திருச்சி விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.97 லட்சத்து 71 ஆயிரத்து 520 மதிப்புள்ள 1 கிலோ 760 கிராம் தங்கம் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment