RS Bharathi bail case : வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரிய காவல்துறை மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து தவறான கருத்து தெரிவித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கடந்த மாதம் மே மாதம் ஆர்.எஸ்.பாரதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கில் ஜூன் 1ஆம் தேதி சரணடைந்த ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப் பிரிவு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், கடும் நிபந்தனைகள் ஏதும் விதிக்காமல் ஆர்.எஸ். பாரதிக்கு அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதாகவும், தொற்று நோய் பரவலை காரணம் காட்டி ஜாமீன் வழங்க முடியாது எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாக ஆர்.எஸ்.பாரதி கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் சென்ற தம்பதிகளுக்கு கொரோனா .. அலறி அடித்து ஓடிய பயணிகள்!
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கபட்டுள்ளதால் அது விசாரணையை பாதித்துள்ளது. ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சை மறுத்தால் அதை நிரூபிக்க அவரது குரல் மாதிரியை எடுக்க வேண்டும். அதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
காவல் துறை தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டன.
அவரது ஜாமீனை ரத்து செய்ய எந்த காரணமும் இல்லை. விரோதப் போக்குடன் மாநில அரசு, தற்போது இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது. ஆதாரமாக சிடி உள்ளது. இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களு பிறகே ஜாமீன் வழங்கியதாகவும் இதில் எந்த விதமான தவறும் இல்லை எனவே காவல்துறையின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகும் ஜாமினை ரத்து செய்ய கோரிய காவல்துறையின் மனு மீது தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமால் தள்ளிவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதி சதீஷ்குமார், பாரதிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய மறுத்த நீதிபதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.