Advertisment

மைதானத்திற்குள் பேரணி நடத்துவதா? - உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் மேல்முறையீடு

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை சுற்றுசுவர் கொண்ட மைதானம், பொதுக் கூட்டங்களை ஆடிட்டோரியத்தில் நடத்தலாம் உள்பட நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் மேல்முறையீடு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
மோசடி பத்திரம் ரத்து செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது? - சுற்றறிக்கை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஊர்வலம், பொதுக் கூட்டங்களை உள் அரங்குகளில், சுற்றுசுவர் கொண்ட மைதானங்களில் நடத்திக் கொள்ளலாம் எனக் கூறி அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

Advertisment

அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி கேட்கப்பட்டது. அப்போது என்.ஐ.ஏ

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்களில் சோதனை நடத்தி கைது நடவடிக்கை மேற்கொண்டது. மத்திய அரசு அமைப்புக்கு தடை விதித்தது. இதனால் மாநிலத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை கருதி, ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

மீண்டும் வழக்கு விசாரணையின் போது, உளவுத்துறை அறிக்கையின் படி தமிழ்நாட்டில் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 ஊர்களில் ஊர்வலம் செல்ல அனுமதிப்பதாகவும், 24 இடங்களில் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க இயலாது என்றும் 23 இடங்களில் உள்ளரங்கில் கூட்டம் நடத்தலாம் என்றும் டி.ஜி.பி. சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதி அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின் உத்தரவு வழங்கினார். அதில், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை மற்றும் நாகர்கோவில் ஆகிய 6 இடங்களை தவிர, மற்ற 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தலாம். ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்களை விளையாட்டு மைதானங்கள், உள் அரங்குகளில் நடத்த வேண்டும். லத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு செல்லக் கூடாது. மதம், மொழி தொடர்பாக எதுவும் பேசக் கூடாது என நிபந்தனைகளுடன் பேரணி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. நிபந்தனைகளை மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் நவம்பர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தப்பட வில்லை. தொடர்ந்து நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment