Advertisment

பட்டியலின மக்களை உள்ளே அனுமதிக்காத கோயிலுக்கு சீல்: ஆர்.டி.ஓ காரை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

வீரணம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவில் பட்டியலினத்தவரை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்ததால் கோவியிலுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

author-image
WebDesk
New Update
ஆர்.டி.ஓ காரை முற்றுகையிட்டு மக்கள் போரட்டம்

ஆர்.டி.ஓ காரை முற்றுகையிட்டு மக்கள் போரட்டம்

வீரணம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவில் பட்டியலினத்தவரை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்ததால் கோவியிலுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். இந்நிலையில் ஆர்.டி.ஓ காரை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.

Advertisment

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் வீரணம்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்நிலையில் நேற்று பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் கோயிலில் சாமி கும்பிட்டபோது அவருக்கு  திருநீறு தர மறுத்து உள்ளே நுழையக்கூடாது என்ற வேறொரு தரப்பினர் வெளியே அனுப்பி உள்ளனர். பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் உள்ளே நுழையக் கூடாது என்று கோவில் நிர்வாகம் பூட்டு போட்டது. இதைத்தொடர்ந்து முனிராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்நிலையில் நேற்று கோவில் பூட்டை திறந்து கரகங்கள் எடுத்து நீர் நிலையில்  விடப்பட்டது. இது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று ஒரு தரப்பினர் வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோட்டாச்சியர் புஷ்பாதேவி சம்பவ இடத்திற்கு வந்து கோயில் நிர்வாக தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை உடன்பாடு, ஏற்படாத நிலையில் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமையில் வருவாய்த் துறையினர் கோயிலுக்கு சீல் வைத்தனர்.

இதனையடுத்து, வருவாய்த்துறையினரிடம் வாக்குவாதம் செய்த மக்கள், கோட்டாட்சியர் புஷ்பாதேவியின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர், அவரை மீட்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அமர வைத்தனர். இதனை தொடர்ந்து கிராம நிர்வாக  அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment