வடகிழக்கு பருவமழை, ஃபீஞ்சல் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கனமழை வெளுத்து வாங்கியது. ஃபீஞ்சல் புயல் மாமல்லபுரம்- புதுச்சேரி இடையே கரையை கடந்தது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு வரும் 1.68 லட்சம் கன அடி நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
அணையின் பாதுகாப்பு கருதி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.சாத்தனூர் அணையின் மொத்த நீர்மட்டமான 118 அடியை எட்டியதால் நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.
அதிக அளவு நீர் வெளியேற்றப்படுவதால் திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் உள்ளிட்ட கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் - விழுப்புரம் இடையேயான சாலையில் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“