Advertisment

சேலம் கோவில் யானையை கருணைக் கொலை செய்யமுடியுமா? - ஐகோர்ட் கேள்வி

சேலம் கோவில் யானையை கருணைக் கொலை செய்யமுடியுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சேலம் கோவில் யானையை கருணைக் கொலை செய்யமுடியுமா? - ஐகோர்ட் கேள்வி

சேலம் கோவில் யானையை கருணைக் கொலை செய்யமுடியுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது தொடர்பாக பதில் அளிக்கவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் முரளீதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சேலம் சுகவனேஸ்வர் கோவில் பெண் யானை ராஜேஸ்வரி காலில் வலி ஏற்பட்டு கடந்த ஒருமாதமாக படுத்த படுக்கையாக உள்ளது. தொடர்ந்து படுத்துகிடப்பதால் அந்த யானைக்கு புண் ஏற்பட்டுள்ளது. அந்த யானையினை மருத்துவ ரீதியாக குணப்படுத்த முடியாது, ஆனால் ஜேசிபி எந்திரம் மூலம் நிற்கவைக்க முயற்சி செய்வதால் மேலும் யானைக்கு காயம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். எனவே யானையை கருணை கொலை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி யானையை கருணை கொலை செய்யமுடியுமா? என்பது குறித்து திங்கட்கிழமை பதிலளிக்கு இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை திங்கள்கிழமை தள்ளிவைத்தனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment