sasikala chennai sasikala car sasikala : சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா சில தினங்களுக்கு முன்பு விடுதலையானார்.
4 ஆண்டுகள் சிறைவாசம் முடித்து விட்டு சென்னை வர பிளான் செய்திருந்த சசிகலாவுக்கு திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மொத்த பிளானும் மாறியது. பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா மருத்துவமனையில் இருந்தப்படியே விடுதலையானர். அங்கிருந்து, பெங்களூர் பனை விட்டுக்கு ஓய்வு எடுக்க சென்றார். ஓய்வுக்கு பிறகு இன்று (8.2.21) சென்னை திரும்பினார்.
சசிகலாவின் வருகை, தமிழகத்தில் குறிப்பா அதிமுக கட்சியில் மிகப்பெரிய புயலை கிளப்பியுள்ளது. வரும் போதே பிரச்சனையா? என்பது போல் சசிகலா அதிமுக கொடியை காரில் பறக்கவிட்டப்படியே சென்னை வந்தார். அதுமட்டுமில்லை, தடையை மீறி 100க்கும் மேற்பட்ட கார்கஓள் சசிகலாவின் காரை பின் தொடர்ந்தது. செல்பி, சாமி தரிசனம், ட்ரோன் வரவேற்பு, பேனர், பட்டாசு என அமமுமவினர் சசிகலாவின் வருகையை அதகளப்படுத்தினர். இன்றைய நாளின் சசிகலாவின் பெங்களூர் டூ சென்னை டிராவல் ஹைலைட்ஸ் புகைப்படங்களை பார்க்கலாம் வாங்க.
தடையை மீறி அதிமுக கொடி பறக்கும் காரில் வந்த சசிகலா .
சசிகலா வந்த காருக்கு பூக்களை தூவி வரவேற்பு.
ஓசூர் பிரதான சாலையில் குவிந்த தொண்டர்கள் கூட்டம்
சசிகலாவை வரவேற்க காத்திருந்த செண்டா மேளங்கள்.
ஜல்லிக்கட்டு காளையுடன் காத்திருந்த காளையர்கள்.
ஓசூரில் முத்துமாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்த சசிகலா. கூடனே டிடிவி தினகரன்.
ட்ரோன் வரவேற்பு அடுத்த பிரம்மாண்டம்.