Advertisment

கவலைக்கிடமான நிலையில் நடராஜன்: வென்டிலேட்டர் நீக்கம்!

கிட்னி பாதிப்பு, நுரையீரல் பாதிப்பும் அவருக்கு உள்ளதால், நடராஜன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
கவலைக்கிடமான நிலையில் நடராஜன்: வென்டிலேட்டர் நீக்கம்!

சசிகலா கணவர் நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisment

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 10-ஆம் தேதி சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரகம் செயல் இழந்ததால் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது.

அவரது நுரையீரலும் பாதிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் முகமது ரேலா உள்ளிட்ட டாக்டர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள்.

அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுசீரகம் தானமாக பெறுவதற்காக தமிழக அரசின் உடல் உறுப்பு தானம் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் தானமாக பெறப்படும் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் அவருக்கு பொருத்தமாக இல்லை. எனவே அவருக்கு உடனடியாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு குளோபல் மருத்துவமனை, நடராஜனின் நிலைமை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 74 வயதாகும் நடராஜன் மருதப்பா, கடந்த 9 மாதங்களாக கல்லீரல் மற்றும் கிட்னி பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் கல்லீரலில் ஏற்பட்டுள்ள மோசமான பிரச்சனையால், கல்லீரல் இன்டன்சிவ் கேர் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிட்னி பாதிப்பு, நுரையீரல் பாதிப்பும் அவருக்கு உள்ளதால், நடராஜன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தற்போது அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்படவில்லை.

நடராஜனின் கல்லீரல் செயல்பாடு முன்பைவிட இப்போது மோசமாகியுள்ளது. நடராஜன் இன்னும் கூட கல்லீரல் மற்றும் கிட்னி மாற்று சிகிச்சைக்காக காத்துள்ளார். நடராஜன் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் நடராஜனின் உடல்நிலை குறித்து அறிந்துள்ளனர்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க நடராஜனின் நெருங்கிய உறவினர்கள் முன் வந்தனர் என்று செய்திகள் வெளியானது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்கக அலுவலகத்தில் நடந்த உறுப்பு தானம் கூட்டத்தில் நடராஜன் உறவினர்கள் இருவர் கல்லீரலையும், சிறுநீரகத்தையும் தானம் தர சம்மதித்திருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நடராஜனின் உடல்நிலை மேலும் மோசமாகி இருப்பதாகவும், கல்லீரல் மற்றும் கிட்னி மாற்று சிகிச்சைக்காக காத்துள்ளார் என்றும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment