Advertisment

News Highlights: மத்திய பட்ஜெட்; 31-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

Sasikala Release : சசிகலா சிகிச்சை பெறும் வார்டுக்கு, இன்று காலை சென்று, விடுதலை ஆகும் கோப்பில் அவரிடம் கையொப்பம் பெறவுள்ளனர்.

author-image
WebDesk
New Update
farmer protest, punjab farmer protest, delhi chalo protest, farmers protest in delhi, வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் போராட்டம், delhi farmers protest, டெல்லி விவசாயிகள் போராட்டம், பஞ்சாப் விவசாயிகள் போராட்டம், punjab farmer protest live news, farmers protest in delhi, farmers protest in punjab, farmer protest in haryana, பேச்சுவார்த்தை தோல்வி, விவசாயிகள் போராட்டம் தொடரும், farmer protest today, farmer protest latest news, farmers protest, farmers protest today, farm bill

Sasikala Release : சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஜெ., தோழி சசிகலா, அதிகாரபூர்வமாக இன்று(ஜன.,27) விடுதலையாகிறார்.

Advertisment

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்துவருகிறார். இவர் தமிழக அரசியலில் பேசுபொருளாக இருப்பதால், அவரது விடுதலை குறித்து அவ்வப்போது விவாதங்கள் எழுந்து வந்தது.இந்நிலையில், கர்நாடக சிறைத்துறை விதிமுறைப்படி, சசிகலாவின் நான்கு ஆண்டுகள் தண்டனை காலம் இன்றுடன் முடிவடைகிறது.

சசிகலா விடுதலையை கோலாகலமாக கொண்டாடி உற்சாக வரவேற்பு அளிக்க அவரது ஆதரவாளர்கள் காத்திருந்தனர். ஆனால் 20ஆம் தேதி அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு பௌரிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அங்கு சிகிச்சை தொடர்ந்து வருகிறது. கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் சசிகலா சிகிச்சை பெறும் வார்டுக்கு, இன்று காலை சென்று, விடுதலை ஆகும் கோப்பில் அவரிடம் கையொப்பம் பெறவுள்ளனர்.

இவருடன் சிறைத்தண்டனை அனுபவித்த , இளவரசி, பிப்., 5ல் விடுதலையாவார் எனக் கூறப்படுகிறது. சுதாகரன் தரப்பில், நேற்று மாலை வரை, அபராத தொகை செலுத்தவில்லை. இதனால், அவரது விடுதலை கேள்விக்குறியாக உள்ளது.

Live Blog

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil



























Highlights

    22:01 (IST)27 Jan 2021

    மாநிலங்களிடையேயான போக்குவரத்துக்கு தடையில்லை - மத்திய அரசு

    மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களிடையேயான போக்குவரத்துக்கும் மற்றும் ஒப்பந்தங்கள் உள்ள நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்துக்கும் எந்த தடையும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது . 

    21:52 (IST)27 Jan 2021

    50 சதவீதக்கும் கூடுதலான இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி: மத்திய அரசு

    பிப்ரவரி 1ம் தேதி முதல் திரையரங்குகள் 50 சதவீதக்கும் கூடுதலான பார்வையாளர்களுடன் இயங்க அனுமதிக்குப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

    20:43 (IST)27 Jan 2021

    இலங்கையின் போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்பும்படியாக ஐக்கிய மனித உரிமை கவுன்சிலின் 46வது கூட்டத்தில் இந்தியா செயல்படவும், இலங்கையில் 13வது அரசியல் சட்டத்திருத்தத்தைச் செயல்படுத்த பிரதமர் அலுவலகம் தலையிடவும் வலியுறுத்தி பிரதமருக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  

    20:34 (IST)27 Jan 2021

    அதிக சுதந்திரமும் அளவுக்கு அதிகமான சன நாயகமும் நம் தேசத்திற்கே எதிராக போகும் - எஸ்.வி .சேகர்

    அதிக சுதந்திரமும் அளவுக்கு அதிகமான சன நாயகமும் நம் தேசத்திற்கே எதிராக போகும் ஆபத்து உள்ளது என திரைப்பட இயக்குனர் எஸ்.வி .சேகர் தெரிவித்தார்.    

    20:32 (IST)27 Jan 2021

    9 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளன

    தற்போது வரை, ஒன்பது மாநிலங்களில் (கேரளா, ஹரியானா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சத்திஸ்கர், உத்தராகண்ட், குஜராத், உத்தரப்பிரதேசம், பஞ்சாப்) உள்ள பண்ணை பறவைகளிலும்,12 மாநிலங்களில் (மத்திய பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, சத்திஸ்கர், இமாச்சல பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், தில்லி, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்) காகம்/இடம்பெயர்ந்த/காட்டு பறவைகளிலும் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

    19:42 (IST)27 Jan 2021

    வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சு நடத்த வாய்ப்பில்லை

    வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சு நடத்த வாய்ப்பில்லை என மத்திய அரசு கருத்து தெரிவிக்கவில்லை என்று மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறியுள்ளார்.

    18:03 (IST)27 Jan 2021

    வேதா நினைவு இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி கிடையாது - உயர்நீதிமன்றம்

    ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தை நினைவுச் சின்னமாக நாளை   திறக்க அனுமதி; ஆனால்,  பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிட்டது. 

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா நிலையம்’ இல்லம் நினைவில்லமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என,17.08.2017 அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    17:54 (IST)27 Jan 2021

    மத்திய பட்ஜெட் : 31-ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்  தொடங்க உள்ள நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வரும் 31-ம் தேதி கூட்டியுள்ளார். மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதியன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதலாம் கட்ட அமர்வு பிப்ரவரி மாதம் 15-ம் தேதியுடன் முடிவடையும்.

    இரண்டாம் கட்ட அமர்வு மார்ச் மாதம் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 8-ம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

    17:40 (IST)27 Jan 2021

    சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

    சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய திருநெல்வேலி மாவாட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா என்பவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அதிமுக அறிவித்தது.      

    17:29 (IST)27 Jan 2021

    டொனால்டு ட்ரம்ப் யூடியூப் கணக்கு நிரந்தரமாக முடக்கம்

    அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கணக்கை யூடியூப் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியுள்ளது.  

    17:27 (IST)27 Jan 2021

    சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்

    சசிகலாவின் வருமான மற்றும் சொத்துக்களின் விவரங்கள் குறித்து அமலாக்கத்துறை மருத்துவமனையில் உள்ள சசிகலாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.    

    17:24 (IST)27 Jan 2021

    4 பெரு முதலாளிகளின் நலனுக்காக நாட்டை நிர்வகித்தால் இதுதான் நடக்கும் - ராகுல் காந்தி

    கொரோனா பொது முடக்க காலத்தில் இந்திய  பெரு முதலாளிகள் தங்கள் வருமனாங்களை 35% அதிகரித்ததாக வந்த அறிக்கையை சுட்டிக் காட்டிய ராகுல் காந்தி, 'பிரதமர் 3-4 பெரு முதலாளிகளின் நலனுக்காக நாட்டை நிர்வகித்தால் இதுதான் நடக்கும்' என்று தனது ட்விட்டரில் பதிவிட்டார்.     

    17:19 (IST)27 Jan 2021

    1,803 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டு தவணை மானிய உதவியாக தமிழகத்திற்கு இதுவரை 1,803 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

    16:54 (IST)27 Jan 2021

    தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பிரசாரம்

    "தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பிரசாரம் " மேற்கொள்ள உள்ளதாக தேமுதிக துணை பொ.செ. சுதீஷ் பேட்டி தெரிவித்துள்ளார்.

    16:15 (IST)27 Jan 2021

    பேஸ்புக் யூடியூப் வீடியோ தணிக்கை செய்ய கோரிய வழக்கு

    பேஸ்புக் யூடியூப் வீடியோ தணிக்கை செய்த பின் வெளியிட உத்தரவிட கோரிய வழக்கு வழக்கில், அங்கீகரிக்கப்பட்ட செய்தி சேனல்களை தவிர வேற எந்த நிறுவனமும் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டுள்ளது.

    15:09 (IST)27 Jan 2021

    விவசாய தலைவர்கள் மீது வழக்குபதிவு

    டிராக்டர் பேரணியின்போது விதிகளை மீறியதாக விவசாய சங்கத்தின் முக்கிய தலைவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    15:05 (IST)27 Jan 2021

    போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவுக்கு இடைக்கால தடை

    ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகளில் இன்று பிற்பகலில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    15:04 (IST)27 Jan 2021

    சென்னையில் 14-வது சீசன் ஐபிஎல் ஏலம்

    14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்.18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    15:04 (IST)27 Jan 2021

    எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை - பிரேமலதா விஜயகாந்த்

    எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை அதிமுகவினரால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    15:02 (IST)27 Jan 2021

    மீண்டும் மருத்துவமனையில் பிசிசிஐ தலைவர் கங்குலி

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    13:49 (IST)27 Jan 2021

    டிடிவி தினகரன் பேட்டி

    ஜெயலலிதா நினைவிடம் திறந்ததை பார்க்கும்போது சசிகலா விடுதலையை கொண்டாடுவது போல்தான் தோன்றுகிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    13:47 (IST)27 Jan 2021

    முதல்வர் பழனிச்சாமி புகழாரம்

    தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என முதல்வர் பழனிச்சாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

    13:46 (IST)27 Jan 2021

    துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி

    ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம் என அதிமுக ஒருங்கினைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

    13:44 (IST)27 Jan 2021

    சசிகலா வருகையை கொண்டாடுகின்றனர் - டி.டி.வி.தினகரன்

    ஜெயலலிதா நினைவிடம் திறப்பு ஆனாலும் சசிகலா வருகையை சென்னையிலும் கொண்டாடுகின்றனர் " என்று அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

    13:43 (IST)27 Jan 2021

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

    "அ.தி.மு.க ஆட்சி தொடர வேண்டும் என்பதே பெண்களின் மனநிலை" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    12:52 (IST)27 Jan 2021

    31ஆம் தேதி சசிகலா வீடு திரும்புவார் !

    கொரோனா தொற்று இல்லாத நிலை 3 நாட்கள் தொடர்ந்தால் வரும் 31ஆம் தேதி சசிகலா வீடு திரும்புவார் என பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை புதிய தகவல். சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லாத நிலை தொடர்ந்தால், 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். 

    12:38 (IST)27 Jan 2021

    என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

    சீர்காழியில் தங்க நகைகளை கொள்ளையடித்த 3 கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை. 

    11:40 (IST)27 Jan 2021

    பாதுகாப்பை திரும்ப பெற்றது கர்நாடகா சிறைத்துறை!

    சசிகலா விடுதலை தொடர்பான ஆவண நகல், மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைப்பு *.சசிகலாவுக்கு வழங்கிய பாதுகாப்பை திரும்ப பெற்றது கர்நாடகா சிறைத்துறை .உடல்நிலை பாதிப்பு காரணமாக தொடர்ந்து சசிகலா மருத்துவமனையில் சிகிச்சை. 

    11:39 (IST)27 Jan 2021

    ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர்!

    சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி. நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர், துணை முதல்வர் மரியாதை

    11:21 (IST)27 Jan 2021

    விடுதலையானார் சசிகலா!

    சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா.  விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை மருத்துவமனையில் சசிகலாவிடம் சிறைத்துறை ஒப்படைப்பு. 

    11:08 (IST)27 Jan 2021

    இரட்டை கொலை . தங்கம் கொள்ளை:

    சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை . தங்கம் கொள்ளை .தாய் - மகன் என இருவரை கொலை செய்துவிட்டு 16 கிலோ தங்கம் கொள்ளை . 4 மணி நேரத்தில் கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர்.  

    11:06 (IST)27 Jan 2021

    சிறையில் இருந்த கைதி தற்கொலை!

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்தவர் முத்துவேல் .சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துவேல் மருத்துவமனை 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

    10:35 (IST)27 Jan 2021

    ஜெயலலிதா நினைவிடம் இன்று திறப்பு!

    ஜெயலலிதா நினைவிடம் இன்று திறப்பு. 80 கோடி மதிப்பில், பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார்

    10:34 (IST)27 Jan 2021

    விரைவில் அமைச்சர் காமராஜ் டிஸ்சார்ஜ் !

    இயல்பு நிலைக்கு திரும்பினார் அமைச்சர் காமராஜ் . ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பு  உடல்நிலை சீராக இருக்கிறது என  மருத்துவமனை தகவல் . உடல் சமநிலையை பொறுத்து விரைவில் அமைச்சர் காமராஜ் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல். 

    10:33 (IST)27 Jan 2021

    ராஜினாமா செய்த எம்ெல்.ஏக்கள்!

    புதுச்சேரி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய நமச்சிவாயம், இன்று காலை 11.30 மணிக்கு பாஜகவில் இணைகிறார் . எம்.எல்.ஏ பதவியில் இருந்து விலகிய தீப்பாய்ந்தானும், மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார். 

    10:00 (IST)27 Jan 2021

    சசிகலா ரிலீஸ் நேரம்!

    சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா இன்று காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார்.

    Sasikala news :   சசிகலாவுக்கு, கடந்த வாரம், சிறையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில், அவர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

    அவருடன், சிறையில், ஒரே அறையில் தங்கியிருந்த இளவரசியும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இருவருக்கும், பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது, சசிகலாவுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்றும், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதேநேரம், சசிகலா முழுமையாக குணமடைந்த பிறகே, அவர் தமிழகம் புறப்படுவார் எனக் கூறப்படுகிறது. விக்டோரியா மருத்துவமனை அல்லது பெங்களூரில் வேறு தனியார் மருத்துவமனையில், சசிகலா தனது சிகிச்சையை தொடர்வார் என்று கூறப்படுகிறது.

    V K Sasikala
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment