Advertisment

அதிமுகவைக் கைப்பற்ற சசிகலா இரண்டாவது சுற்றுப் பயணம்

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவை, அம்மாவுடனான (ஜெயலலிதாவுடனான) அவரது தொடர்பைக் குறிப்பிடும் வகையில், அவருடைய ஆதரவாளர்களால் சின்னம்மா என்று அழைக்கப்படுகிறார்.

author-image
WebDesk
New Update
Political Pulse, Sasikala, AIADMK, Jayalalithaa, EPS, E Palaniswami, OPS, O Panneerselvam, சசிகலா, அதிமுக, ஓபிஎஸ், இபிஎஸ், தமிழக அரசியல், Chennai news, Chennai, Tamil Nadu, Tamil Nadu news, India news, Indian express, Tamil Indian express news, current affairs

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவை, அம்மாவுடனான (ஜெயலலிதாவுடனான) அவரது தொடர்பைக் குறிப்பிடும் வகையில், அவருடைய ஆதரவாளர்களால் சின்னம்மா என்று அழைக்கப்படுகிறார்.

Advertisment

என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், சசிகலாவை அதிமுகவினர் விரும்பமாட்டார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நீண்டகால நம்பிக்கைக்குரியவர், புகழ்பெற்ற சூஃபி ஞானி நாகூரில் உள்ள தர்காவிவ் ஏப்ரல் 27-ம் தேதி இப்தார் விருந்து நடத்துவதற்கான நிகழ்ச்சியை அறிவித்துள்ளதன் மூலம் கட்சிக்கு மீண்டும் ஒரு அறிவிப்பை தந்துள்ளார். அதைத் தொடர்ந்து மே 10-ம் தேதி மதுரையில் இருந்து மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் தொடங்க உள்ளார்.

ஜெயலலிதாவுக்குப் பிறகான அதிமுகவில், பாஜகவின் பிடி அதிகரித்து வருவதைக் கண்டு பீதியில் இருக்கும் சிறுபான்மையினருக்கும், அவர் அரசியலில் இருந்து போய்விடவும் இல்ல்லை, மறக்கப்படவுமில்லை அவர் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அதிமுக இரட்டைத் தலைமை எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு தரப்புக்கும் இந்தச் செய்தி அமைந்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த சின்னம்மா சசிகலா, அம்மாவுடனான (ஜெயலலிதா) அவரது தொடர்பைக் குறிப்பிட்டு அவருடைய ஆதரவாளர்கள் அதிமுகவில் சசிகலாவின் செல்வாக்கை குறிப்பிட்டு வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் இ.பி.எஸ் மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரிடம் இருந்து கட்சியை மீண்டும் கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சசிகலா - அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கருதப்பட்ட சசிகலா, பெங்களூரு சிறையில் இருந்து தமிழகம் திரும்பினார். பிப்ரவரி 2021 இல். தன்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று அறிவித்த சசிகலா, அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டபோது, எதிரிகள் ஆட்சியைக் கைப்பற்ற விடமாட்டேன் என்று கூறினார்.

ஜெயலலிதாவின் தொடர்ச்சியாக சசிகலாவின் அக்காள் மகன் தினகரனின் அமமுக மூலம் அவருக்கு களத்தில் உள்ள பலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சசிகலா கூறிய வார்த்தைகளுக்கு ஏற்ப இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பு, அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக தனது முடிவை அறிவித்தார். மேலும்,, அம்மாவின் ஆட்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவர் மீது இன்னும் நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக, அவர் பாஜகவைக் கட்டுப்படுத்துவதில் இருந்து விலகிவிட்டார் என்று அவருடைய எதிர்பாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

சசிகலாவிடம் இருந்து பலம் பெற்ற டிடிவி தினகரன், அன்றிலிருந்து தனது செல்வாக்கில் சரிவைக் கண்டு வருகிறார். ஒரு காலத்தில் மாநிலத்தின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராகக் கூறப்பட்ட அவர், இப்போது அரிதாகக்கூட பார்க்க முடியவில்லை. மேலும், தனது அமலாக்கத் துறை இயக்குநரக வழக்குகளை எதிர்த்துப் போராடுவதில் மும்முரமாக இருக்கிறார்.

ஆனால், சசிகலா தொடர்ந்து அரசியல் சூழலைப் பரபரப்பாக்கி வருகிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த பிறகு, அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி இருப்பதாகக் கூறியது முடிவுக்கு வந்தது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையேயான கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக பரவியதால், அவருடைய ஆதரவு முகாம் மாவட்டங்களில் உள்ள சாதாரண தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசிய பதிவுகளை வெளியிடத் தொடங்கினர். அந்த தொலைபேசி அழைப்புகளில், அவர்களுக்கு கட்சியில் தனது தீவிரமான பங்களிப்பு இருக்கும் என்று உறுதியளித்தார். மேலும், அதிமுகவை மீட்பதற்கு தேவையானதை செய்வேன் என்று கூறினார்.

சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக் கூறியதை திரும்பப் பெற்றது தந்திரோபாயமானது என்றும், தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக சட்டமன்றப் பிரச்சாரத்தைத் தோளில் சுமப்பதால் அவருக்கு எந்தப் பலனும் இல்லை என்றும் அவருக்கு நெருக்கமான ஒருவர் சுட்டிக்காட்டினார். இபிஎஸ் முகாமினால் ஏற்பட்ட நஷ்டம் தன் மீது சுமத்தப்பட்டுவிடுமோ என்றும் அவர் அஞ்சினார். அதிமுக தோல்விக்குப் பிறகு நிலைமை மாறிவிட்டது. கட்சியில் அவர் மீண்டும் நுழைவதை ஆதரிக்கும் ஓபிஎஸ் முகாமுடன் மீண்டும் இணைவது அவருடைய நீண்ட கால திட்டங்களுக்கு சாதகமாக இருந்தது” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

மாறாக, சசிகலா அதிமுகவுக்கு திரும்புவதில் இபிஎஸ் ஆர்வம் காட்டவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஒரு காலத்தில் இயல்பான முதல்வர் தேர்வாகக் கருதப்பட்டவர் ஓ.பி.எஸ் - சட்டச் சிக்கல்களில் பதவி விலக நேரிடும் ஒவ்வொரு முறையும் தன்னலமில்லாமல் அந்த பதவியை நிரப்புபவராக பணியாற்றியவர் - இ.பி.எஸ் அவரைத் தோற்கடித்தது மட்டுமல்லாமல் இப்போது அதிமுகவைக் கட்டுப்படுத்துகிறார். சசிகலா எதையும் செய்ய அதிகாரம் இல்லாத இல்லாமல் அதிகார மையமாக இருக்கிறார்.

உண்மையில், 2021 தேர்தல் தோல்விக்குப் பிறகு, அ.தி.மு.க தலைமை, சசிகலாவுக்கு தொடர்புள்ள தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது. சசிகலா ஆதரவாளர்கள் இடையே, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பேசினர். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்பினர். ஆனால், சிறுபான்மை வாக்குகள் (இழப்பு) உட்பட பல காரணங்கள் எங்கள் தோல்விக்கு வழிவகுத்தன… பா.ஜ.க உடனான கூட்டணி காரணமாக, சிறுபான்மை வாக்குகள் அனைத்தையும் இழந்தோம்” என்று சி.வி. சண்முகம் கூறினார். சமீபத்தில், பாஜகவுடனான கூட்டணியை விமர்சித்ததற்காகவும், சசிகலாவை ஆதரித்ததற்காகவும் அன்வர் ராஜாவை அதிமுக கட்சியில் இருந்து நீக்கியது.

இ.பிஎஸ்.-இன் சட்டச் சிக்கல்கள் காரணமாக சசிகலாவுக்கு இப்போது வாய்ப்பு இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்தில், அவரும் சசிகலாவும் அடிக்கடி தங்கியிருந்த கோடநாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரலில் மர்மக் கொள்ளையும், அதைத் தொடர்ந்து இரண்டு மர்ம மரணங்களும் நிகழ்ந்தன. சமீபத்தில், தமிழக காவல்துறை சிறப்பு தனிப்படை போலீஸ் சசிகலாவிடம் இது குறித்து விசாரணை நடத்தினர்.

இருப்பினும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் முன்பு செய்தது போல் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஜூலை 2021 -இல் அறிவிக்கப்பட்ட மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் ஒருபோதும் நிறைவடையவில்லை.

“சட்டசபைத் தேர்தல் நேரத்தில் சசிகலா பிரச்சாரத்தில் இருந்து விலகி இருக்க முடிவு செய்ததன் மூலம் உண்மையான அலையை உருவாக்குவதை அவர் தவற விட்டுவிட்டார். பெங்களூரு சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட நேரத்தில் அவருடைய புகழும் தீவிரத்தை இழந்திருக்கலாம்” என்று ஒரு வட்டாரம் கூறியது.

சசிகலாவின் அரசியலை கூர்ந்து கவனிக்கும் மற்றொரு அதிமுக தலைவர், சசிகலாவின் விருப்பங்கள் வரையறுக்கப்பட்டவை என்று கூறினார். “அவர் மீது வழக்குகள் உள்ளன… 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் கூட்டணி கட்சியான அதிமுகவை பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் பாஜக கண்டுகொள்ளாது. அவர் ஏன் பாஜகவின் கோபத்திற்கு ஆளாக வேண்டும், குறிப்பாக நீண்ட காலத்திற்கு அவர் ரிஸ்க் எடுக்கும் ஒரே நபர் தினகரன் மட்டுமே, சசிகலா அவருடன் நெருக்கமாக இல்லை?” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Eps Aiadmk Ttv Dhinakaran Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment