Advertisment

சென்னை ஆர்.ஏ.புரம் குடிசைகளை அகற்றாவிட்டால் கடுமையான கருத்து தெரிவிப்போம்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை ஆர். ஏ.புரம் கோவிந்தசாமி நகரில் உள்ள குடிசைகளை 4 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
Vasuki Jayasree
New Update
சென்னை ஆர்.ஏ.புரம் குடிசைகளை அகற்றாவிட்டால் கடுமையான கருத்து தெரிவிப்போம்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை ஆர். ஏ.புரம் கோவிந்தசாமி நகரில் உள்ள குடிசைகளை 4 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பாக ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், குடிசைகளை அகற்ற வரும் அக்டோபர் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிலவுவதாகவும் அவர் வாதிட்டார். மொத்தம் உள்ள 238 குடும்பங்களில் 138 குடும்பங்கள் அங்கே தங்கியுள்ளனர், அவர்களை அப்புறப்படுத்த அக்டோபர் வரை கால அவசாகம் வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது குறுகிட்ட நீதிபதிகள் சட்ட ஒழுங்கி பிரச்சையை சரியாக கையாள வேண்டும். இந்த பிரச்சனையில் 10 ஆண்டுகள் காலத் தாமதமாகிவிட்டது என்றும் தெரிவித்தனர். மேலும் 2 வாரங்களில் நடடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ அரசு தரப்பில் 4 வாரங்கள் அவகாசம் கேட்கபட்டது. இந்நிலையில் 4 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். உத்தரவை செயல்படுத்தாவிட்டால், தலைமை செயலாளரும், காவல் துறை உயர் அதிகாரிகளும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.   

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment