Advertisment

திடீரென மயக்கம் போட்டு விழுந்த சீமான்: தொண்டர்கள் பதற்றம்

மயக்கத்தில் இருந்த அவரை உடனடியாக தொண்டர்கள் ஆம்புலன்ஸுக்கு தூக்கிச் சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
நளினி விடுதலைக்கு எதிராக தி.மு.க அரசு: சீமான் கண்டனம்

திருவொற்றியூரில் பொதுமக்களிடம் பேசிக்கொண்டிருந்த, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென்று மயங்கி விழுந்தார்.

Advertisment

மயக்கத்தில் இருந்த அவரை உடனடியாக தொண்டர்கள் ஆம்புலன்ஸுக்கு தூக்கிச் சென்றனர்.

இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் ஆக்கிரமிப்புப் பகுதிகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சீமான் அங்கு சென்றார். அப்போது அவர்களிடம் பேசிவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

இதையும் படியுங்கள்: சென்னையில் சொத்துவரி 150% வரை உயர்வு… உங்க வீட்டுக்கு எவ்வளவு வரி? முழு விவரம்

செய்தியாளர்கள் சந்திப்புக்கு பிறகு சற்று நேரம் அங்கு நின்று கொண்டிருந்த சீமான், திடீரென மயங்கி கீழே சரிந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்தனர். வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை கொண்டு அவரது முகத்தில் தெளித்தனர்.

இதையடுத்து, ஆம்புலன்ஸை அழைத்த அப்பகுதியினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment