ஒரே மின் இணைப்பு எண்ணாக மாற்ற வேண்டும் என்ற சுற்றறிக்கை அனுப்பவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது “ ஒரு குடியிருப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால், அதை ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற சுற்றறிக்கையை அனுப்பவில்லை. அதிகாரி ஒருவர், அவராக சுற்றறிக்கையை அனுப்பி இருந்த நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யபட்டார். 67,000 பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை.
எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும். 100 யூனிட் மின்சாரம் இலவசம். அதிமுக ஆட்சியில்தான் 9 மணி நேரம் மட்டுமே விவசாயிகளுக்கு முன்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 18 மணி நேரம் முன்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகள் ,விசைத்தறிகளுக்குக்கான இலவச மின்சாரம் மற்றும் மானியங்களில் எந்த மாற்றமும் இல்லை. பழைய நிலையே நீடிக்கும். கோடை காலத்தில் அதிகமாக தேவைப்படும் மின்சாரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் “ என்று அவர் கூறினார்.