சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் கணவருடன் வாக்கிங்க் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை பெசன்ட் நகர், கடற்கரை சாலையை சேர்ந்தவர் பீஷ்மராஜ். இவருடைய மனைவி சந்தியா. இவர் 7 மாத கர்பிணியாக இருப்பதால் கணவருடன், திருவான்மியிர் கலாஷேத்ரா காலனி, காவேரி தெரு வழியாக இன்று காலை வாக்கிங் சென்றார்.
அப்போது டூ வீலரில் வந்த மர்ம நபர், சந்தியாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். பின்னர் அங்கிருந்து தப்பியோடினான்.
இது குறித்து சந்தியா திருவான்மியூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.