ஹெச்.ராஜா குறித்து சித்தார்த் : நீதிமன்றத்தை அசிங்கமாக பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவை இந்துத்துவா தீவிரவாதி என்று விளாசியுள்ளார் நடிகர் சித்தார்த்.
மேலும் படிக்க : ஹெச்.ராஜா மீது சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே பள்ளிவாசல் இருக்கும் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கான மேடை அமைக்க பாஜகவினருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஹைகோர்ட்டாவது ம......வது என்று திட்டிய வீடியோ வெளியாகி வைரலானது. வைரல் உயர் நீதிமன்றத்தை தகாத வார்த்தையால் திட்டிய ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
மேலும் படிக்க - ஹெச்.ராஜா மீது பாய்கிறது வழக்கு
இதைத் தொடர்ந்து, 'உயர் நீதிமன்றத்தை நான் திட்டவில்லை. என் குரலை யாரோ எடிட் செய்து பேசியுள்ளார்கள்' என்று விளக்கம் அளித்துள்ளார் ராஜா.
If #TNPolice which shot and killed protestors simply watches this rabid idiot @HRajaBJP as he abuses the High Court, police, minorities and most ironically Hinduism, then it shows what they stand for! This #HindutvaTerrorist should be shown the law and the constitution. #Shame https://t.co/vhYh7Cft7U
— Siddharth (@Actor_Siddharth) September 16, 2018
இந்நிலையில், ஹெச். ராஜாவின் வீடியோவை பார்த்த நடிகர் சித்தார்த் காட்டமாக ட்வீட்டியுள்ளார். அதில், "போராட்டம் செய்தவர்களை சுட்டுக் கொன்ற தமிழக போலீஸ் உயர்நீதிமன்றம், போலீஸ், சிறுபான்மையினர், முக்கியமாக இந்து மதம் என அனைத்தையும் ஹெச்.ராஜா இழிவாக பேசுவதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது அவர்களது சார்பு நிலையைக் காட்டுகிறது. இந்த இந்துத்துவா தீவிரவாதி சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும்" என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.