Advertisment

திருச்சி வழியாக 6 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

இந்த ரயில்கள் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் செயல்பட தொடங்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
southern railway to operate six more special trains via trichy

Indian Railways

திருச்சி செல்வே வழியாக திருநெல்வேலி, செங்கோட்டை, மதுரை, ராமேஸ்வரம், காரைக்கல் மற்றும் கொல்லம் ஆகிய இடங்களுக்கு ஆறு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் செயல்பட தொடங்கும். திருச்சி பயணிகள், திருச்சி-சென்னை ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸை மீண்டும் தொடங்க வேண்டும் என, ரயில்வே அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisment

‘ஸ்ட்ரெஸ்’ இருக்குதா உங்களுக்கு? Mi பேண்ட் 5 எப்படி உதவுதுன்னு பாருங்க!

அறிவிப்பின்படி, தெற்கு ரயில்வே அக்டோபர் 2-ம் தேதி முதல் சென்னை-திருநெல்வேலிக்கு இடையில் சென்னை சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு தினசரி ரயிலை (02631/02632) இயக்கும். இந்த ரயில் சென்னையிலிருந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு திருநெல்வேலியை அடையும். பதில் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 6.05 மணிக்கு சென்னையை அடையும்.

சென்னை-செங்கோட்டைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சென்னை சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு தினசரி (ரயில் எண் 02661/02662) இரவு 8.40 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு செங்கோட்டையை அடைகிறது. மறுமுனையில், மாலை 6.10 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சென்னை அடையும். இந்த ரயில் அக்டோபர் 3 ஆம் தேதி தனது இயக்கத்தைத் தொடங்குகிறது.

சென்னை-மதுரைக்கு இடையில் சென்னை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 02613/02614) வாராந்திர ஆறு நாட்கள் (வியாழக்கிழமைகளைத் தவிர) இயக்கப்படும். இந்த ரயில் அக்டோபர் 2-ஆம் தேதி தனது இயக்கத்தைத் தொடங்கும். சென்னை-ராமேஸ்வரம்-சென்னை சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு தினசரி (ரயில் எண் 02205/02206) மாலை 5.45 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு ராமேஸ்வரத்தை அடைகிறது. பதிலாக இரவு 8.25 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னையை அடையும். இந்த ரயில் அக்டோபர் 2 ஆம் தேதி சேவையைத் தொடங்குகிறது.

சென்னை-கொல்லம் சிறப்பு தினசரி ரயில் (ரயில் எண் 06723/06724) இரவு 8.10 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 1.15 மணிக்கு கொல்லம் சென்றடையும். பதில் ரயில் மாலை 3 மணிக்கு கொல்லத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.10 மணிக்கு சென்னையை அடையும். இந்த சிறப்பு ரயில் அக்டோபர் 3-ஆம் தேதி தனது இயக்கத்தைத் தொடங்குகிறது.

காரைக்கல்-எர்ணாகுளத்துக்கு இடையே இயக்கப்படும் காரைக்கல் சிறப்பு தினசரி ரயில்கள் (ரயில் எண் 06187/06188) அக்டோபர் 4 முதல் திருச்சி வழியாக இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு வியாழக்கிழமை காலை 8 மணியிலிருந்து தொடங்கும் எனவும் திருச்சி ரயில்வே பிரிவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் 5ஆம் கட்ட தளர்வுகள்: அக். 15க்குப் பிறகு பள்ளிகள் செயல்பட அனுமதி

திருச்சி வழியாக பல ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அதோடு இரண்டாம் கட்ட ரயில்களும் இயங்கத் தொடங்கியுள்ளன. ஆனால் திருச்சி-சென்னை ராக்ஃபோர்ட் ரயில் இயக்கத்தை மட்டும் ரயில்வே அதிகாரிகள், அறிவிக்கவில்லை என்று திருச்சி உள்-நகர மேம்பாட்டு முயற்சிகளின் உறுப்பினர் வி பி ஜெகநாத் தெரிவித்தார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Indian Railways
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment