Advertisment

பத்திரப்பதிவு முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு: அமைச்சர் மூர்த்தி

பத்திரப்பதிவு முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேரவையில் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
minister moorthy

தமிழக சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை (முத்திரைத் தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு) மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மூர்த்தி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

Advertisment

போலி ஆவணங்கள் பதிவு, அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் கருவூலத்திற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியான புகார்கள் உள்ளன. கடந்த கால தவறுகளை சரிசெய்து எதிர்காலத்தில் எந்த தவறும் நடக்காமல் பார்த்துக் கொள்வது பதிவுத் துறைக்கு பெரிய சவாலாக உள்ளது.

பதிவுத் துறையில் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ள பதிவு தவறுகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டு, போலியாகப் பதிவு செய்யப்பட்ட மற்றும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட இனங்களைக் கண்டறிந்து அறிக்கை அளிப்பதற்காக, ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு ஏற்படுத்தப்படும்.

இக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில், பதிவு தவறுகள் சரி செய்யப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடரப்படும். 2021-2022ஆம் நிதியாண்டில் இதற்கான தொடரா செலவினம் ரூ.80 லட்சம் மற்றும் தொடர் செலவினம் ஆண்டொன்றுக்கு ரூ.2.20 கோடி ஆகும்.

இறந்தவர்களின் பெயரில் உள்ள நிலங்களை பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் நில உரிமையாளர்கள் தங்கியிருப்பதாக போல ஆள்மாறாட்டம் செய்து போலி பட்டாக்களை உருவாக்குதல், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு சொத்துக்களை விற்பனை செய்தல், காணாமல் போன ஆவணங்களை காரணம் காட்டி சொத்துக்களை பறித்தல் மற்றும் உடன்பிறப்புகளிடையே சொத்துக்களின் முறையற்ற பகிர்வு போன்றவை நடைபெற்றுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கையின் அடிப்படையில், குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மூர்த்தி கூறினார்.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆவணங்களை ரத்து செய்ய வழியில்லாமல் சிரமங்களை எதிர்கொண்டு தற்போது அரசுக்கு மனுக்களை அனுப்பியுள்ளனர். போலி பட்டியல் தயாரிக்கும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

மோசடி பத்திரங்கள் குறித்த புகார்களை பதிவாளர் விசாரித்து, சம்பந்தப்பட்ட நபர்களிடம் விளக்கம் கேட்கலாம். அதன் அடிப்படையில், அந்த குறிப்பிட்ட பத்திரத்தை ரத்து செய்து பதிவாளர் உத்தரவிடலாம். இதற்கான சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேறியது. போலி விற்பனை பத்திரங்கள் மூலம் பதிவு செய்யும் அதிகாரிக்கு அபராதம் மற்றும் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட குக்கிராமங்கள் ஒரே சார் பதிவாளர் அலுவலக எல்லைக்குள் அமையும் வகையில் பதிவு எல்லைகள் சீரமைக்கப்படும். முதலீட்டாளர்களின் நலனுக்காக வங்கிகளில் உரிமப் பத்திரங்களை டெபாசிட் செய்வது மற்றும் வாடகை ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை ஆன்லைனில் பதிவு செய்ய அரசு வழிவகை செய்வதாக அமைச்சர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment