Advertisment

தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு சொகுசு ரயில் இயக்கம்

"உட்கிரிஸ்ட்" திட்டத்தின் கீழ், இந்த ரயிலின் பெட்டிகள், தரம் உயர்த்தப்பட்டுள்ளன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

சென்னை தாம்பரம் - நாகர்கோவில் இடையே, தரம் உயர்த்தப்பட்ட சிறப்பு சொகுசு ரயில் சேவை, நேற்று முன்தினம் ( மே 8) துவங்கியது. வாரம் மூன்று முறை வீதம் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

Advertisment

தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளிலும், நாகர்கோவிலிலிருந்து தாம்பரத்திற்கு புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 22657 என்ற எண்ணுடன் இந்த சிறப்பு சொகுசு ரயில் இயக்கப்பட உள்ளது.

"உட்கிரிஸ்ட்" திட்டத்தின் கீழ், இந்த ரயிலின் பெட்டிகள், தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

.

வைபை வசதி, எல்இடி விளக்குகள், துர்நாற்றம் மற்றும் மாசு ஏற்படாத வகையில் பசுமை சூழலுடன் கூடிய கழிப்பைற வசதி இந்த ரயிலின் சிறப்பம்சங்கள் ஆகும். பயணிகளின் இருக்கைகளும் நவீனமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயிலை, நேற்று இரவு, 7:20 மணிக்கு, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து, சென்னை கோட்ட, மூத்த பிரிவு பொறியாளர், ராமன், மூத்த தொழில்நுட்ப வல்லுனர், விஜயகுமார், நிலைய மேலாளர், சீனிவாசன் ஆகியோர், கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

சொகுசு ரயிலில் பயணிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

- குமரன் பாபு

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment