Advertisment

சென்னை இ.சி.ஆர்-ல் ஆன்மீக- கலாச்சார பூங்கா: 223 ஏக்கரில் தமிழக அரசு பிரமாண்ட திட்டம்

சென்னை திருவிடந்தை அருகே இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் நெடுஞ்சாலையில், 223 ஏக்கர் பரப்பளவில் ஆன்மீக மற்றும் கலாச்சார பூங்கா கட்ட திட்டமிடப்படுகிறது.

author-image
Janani Nagarajan
New Update
சென்னை இ.சி.ஆர்-ல் ஆன்மீக- கலாச்சார பூங்கா: 223 ஏக்கரில் தமிழக அரசு பிரமாண்ட திட்டம்

சென்னையில் ஆன்மீக- கலாச்சார பூங்கா

சென்னை திருவிடந்தை அருகே இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் நெடுஞ்சாலையில், 223 ஏக்கர் பரப்பளவில் ஆன்மீக மற்றும் கலாச்சார பூங்கா அமைக்க தமிழ்நாடு சுற்றுலா மற்றும் மனிதவள துறையானது திட்டமிட்டுள்ளது. இது சென்னைவாசிகளுக்கு ஈ.சி.ஆர். பகுதியில் மற்றொரு சுற்றுலாத்தலமாக அமையவிருக்கிறது.

Advertisment

ஆன்மீகம், கலாச்சாரம், தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஒரு ஆன்மீக தலமாக தமிழ்நாட்டிற்கு மற்றொரு அடையாளத்தை கொடுக்கும் முயற்சியில், நீர்முனை சுற்றுலா தளங்களை உருவாக்குவதற்கு கடற்கரையின் பெரும்பகுதியை பயன்படுத்தவிருக்கின்றனர்.

இத்திட்டத்தை மேற்கொள்வதற்காகவும் இப்பகுதியை மேம்படுத்துவதற்காகவும் கட்டடக்கலை ஆலோசகர் விரைவில் நியமிக்கப்படுவார். 

திட்டம் தயாரான பிறகு விரிவான திட்ட அறிக்கை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். டெண்டரில் விவரிக்கப்பட்டுள்ள திட்டத்தில், குடிசைகள், உணவு நீதிமன்றம், காட்சி கோபுரம் மற்றும் பிற நீர்முனையை பொழுதுபோக்கு தளமாக உருவாக்குவதாக கூறப்பட்டிருக்கிறது.

நடைபாதைகள், நீர்வழிகள், சைக்கிள் பாதைகள் ஆகியவற்றைப் உருவாக்கி பார்வையாளர்களுக்கு நீர்முனையை அணுகும் அளவிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நீர்முனைகளில் படகு சவாரி, சவாரி, குழந்தைகளுக்கான மண்டலங்கள் போன்ற செயல்பாடுகளை உருவாக்கி மேம்படுத்தவுள்ளனர். கருப்பொருள் சிற்பங்கள், சிறு கடைகள், திறந்தவெளி திரையரங்குகள், கலாச்சார ஹட், நிகழ்வு இடம், உணவு அரங்கம் ஆகியவற்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் மாநில அரசின் நிதியுதவி பெற்று செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் அதிகாரியின் அனுமதி கிடைத்ததும் பணிகள் துவங்கவிருக்கின்றனர்.

பெரிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு சென்னை நகரில் அத்தகைய இடம் அமையாததால், சுமார் 30,000 முதல் 40,000 பேர் தங்கக்கூடிய பெரிய நிகழ்வு இடம் இங்கு அமையவிருக்கிறது. 

தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடிப்படையில் இந்த ஆன்மிக பூங்கா அமைக்கப்படும் என்றும், மருத்துவ தாவரங்கள் கொண்ட மூலிகை பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதைத்தொடர்ந்து, ஈ.சி.ஆர்.இல் 500 ஏக்கர் நிலப்பரப்பில் தடகள டிராக்குகள், உட்புற சைக்கிள் ஓட்டுதலுக்கான பகுதி, ஹாக்கி மைதானம், கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் குத்துச்சண்டைக்கான பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய 700 கோடி மெகா விளையாட்டு தளத்தை கட்டப்போவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Eco Park Tourism
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment