எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று கன்னியாகுமரிக்கு சென்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கன்னியாகுமரி செல்வதற்கு முன்பு திருநெல்வேலி பாளையங்கோட்டையில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பினை ஏற்று தொண்டர்கள் மத்தியில் பேசினார் எடப்பாடி பழனிசாமி.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா - நெல்லையில் வரவேற்பு
பாளையங்கோட்டை கேடிசி நகரில் நடைபெற்ற அக்கூட்டத்தில் “அதிமுக கட்சியில் இருக்கும் சாதாரண தொண்டர் கூட முதலமைச்சர் ஆகலாம். ஆனால் திமுக கட்சி வாரிசு அரசியல் கட்சி” என்று குற்றம் சாட்டினார்.
தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும், நம் மக்களின் தேவைகளை நிறைவேற்றவும், மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் நாம் அனைவரும் பலமாக செயல்பட வேண்டும் என்று கூறினார். மேலும் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று பல்வேறு நன்மைகளை மத்திய அரசிடம் இருந்து பெற முடிந்தது.
25ம் தேதி காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிக்கு எதிராக அதிமுகவின் கண்டன பொதுக்கூட்டம்
சாதாரண விவசாயி கூட தமிழக முதல்வராகலாம்
நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன். மேடையில் இருக்கும் அமைச்சர்கள் எல்லாம் உழைக்கும் வர்க்கத்தினர். அதிமுகவில் இருக்கும் சாதாரண விவசாயி கூட தமிழகத்தின் முதல்வராக வரமுடியும்.
ஆனால் திமுகவில் இது சாத்தியமில்லை. ஸ்டாலின் கொல்லைப்புறமாக பதவிக்கு வந்தவர். பல ஆண்டுகளாக தொண்டர்களாக கட்சிப் பணியாற்றும் திமுகவினரால் முதலமைச்சர் ஆக முடியுமா என்று கேள்வி எழுப்பினார் எடப்பாடி பழனிசாமி. திமுகவின் குடும்ப அரசியல் பற்றியும், ஊழல் பற்றியும் நேற்று நடைபெற்ற கூட்டங்களில் பேசினார் தமிழக முதல்வர்.
கன்னியாகுமரியில் நடைபெற இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அரங்கிற்கு செல்வதற்கு முன்பு நெல்லையில் வள்ளியூர் பகுதியில் தொண்டர்களை சந்தித்து பேசினார் எடப்பாடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.