சென்னையில் நேற்று நடைப்பெற்ற திமுக போராட்டத்தில் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் கன்னத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறைந்த வீடியோ வைராலாகி வருகிறது.
Advertisment
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நேற்றைய தினம் திமுக சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாபெரும் போராட்டம் நடைப்பெற்றது. இதில் சென்னையில் உள்ள அண்ணாசலை, மெரினா போன்ற முக்கிய இடங்களில் நடைப்பெற்ற போராட்டங்களில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.
சென்னை அண்ணாசாலையில் திமுக சார்பில் நடைப்பெற்ற பேரணியில், மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு முழக்கங்களை எழுப்பினர். அப்போது, கூட்டத்தில் கலந்துக் கொள்ள வந்த இளைஞர் ஒருவர், ஸ்டாலின் உடன் செல்பி எடுக்க முயன்றார்.
அப்போது, அதைத் தடுத்த ஸ்டாலின், அந்த இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மேலும், அந்த இளைஞரை தள்ளியும் விட்டார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக கடந்த வருடம் கோவையில் நடைபயணம் சென்ற ஸ்டாலின், தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த தொண்டர் ஒருவரை தள்ளி விட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது மீண்டும் ஸ்டாலின் இதுப்போன்ற சர்ச்சையில் சிக்க இருப்பது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.