Advertisment

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

Stalin visits Kanniyakumari heavy rain affected areas: கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்

author-image
WebDesk
New Update
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், மழை வெள்ள பாதிப்புகள் குறித்து இன்று (திங்கட்கிழமை) முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. மேலும் மாவட்டம் முழுவதுமே கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. 100 க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து இன்னும் வடியாமல் உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெல், வாழை, ரப்பர், தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. கால்வாய்கள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டதோடு, கடும் வெள்ளத்தால் பல சாலைகளும் சேதமடைந்தன.

இந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன், தோவாளை பெரியகுளம் நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட பாதிப்பையும், குளத்தின் கரை சீரமைப்பு பணியையும் ஆய்வு செய்தார். பின்னர் ஆரல்வாய்மொழி, தோவாளை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கிருஷ்ணசாமி கோயில் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு பாய், படுக்கை விரிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து திருப்பதிசாரம், தேரேகால் பகுதியில் கால்வாய் கரை உடைப்பு, குழாய் மற்றும் சாலை சேதங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து பேச்சிப்பாறை பகுதிக்கு சென்று அணை மற்றும் வெள்ள சேத பகுதிகளையும், மணவாளக்குறிச்சி பெரிய ஏலா பகுதியில் வெள்ள சேத பகுதிகளையும் பார்வையிட்டார். 

இந்த ஆய்வின்போது, முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி. எம்.எல்.ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

பின்னர் நாகர்கோவில் மாவட்ட் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளிடம் வெள்ள சேதம் தொடர்பாக கேட்டறிந்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment