தமிழக மருத்துவ கல்லூரிகளில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இடங்கள் ஒதுக்கப்படும் என்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தொடர்பான மசோதாக்கள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் மாணவர்கள் பெற்றிருந்தாலும், தமிழக மாணவர்களுடைய பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என அரசு உறுதியாக உள்ளது.
தமிழக மாணவர்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக 85% இடங்கள் மாநில பாடதிட்டத்தின்படி படித்த மாணவர்களுக்கும்; 15% இடங்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டம் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கும் வகையிலான அரசானை வெளியிடப்பட்டு உள்ளது. நீட் தேர்வு முடிவு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். 12 மார்க் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இந்த முறையின்படி மாணவர்களுக்கு கலந்தாய்வு 17ம் தேதி துவங்கும்.
இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.