சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது.
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன் மாணிக்க வேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சிலைக்கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிஐ க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஐஜி பொன்.மாணிக்க வேல் தலைமையில் சிறப்பு பிரிவு அமைத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அந்த உத்தரவை மீறும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சிலை கடத்தலில் தொடர்புடைய அமைச்சர்கள், மூத்த அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளை காப்பாற்றும் நோக்குடன் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விசாரணை அமைப்பிலிருந்து ஐஜி பொன்.மாணிக்கவேலை நீக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.