Advertisment

சிலைக் கடத்தல் வழக்கினை சிபிஐக்கு மாற்றத் தேவையில்லை - மத்திய அரசு

தமிழக அரசு முறையான ஆவணங்களை சமர்பிக்கும் பட்சத்தில் யோசனை செய்யப்படும் !

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிலைக் கடத்தல் வழக்கு

சிலைக் கடத்தல் வழக்கு

தமிழகத்தில் தொடர்ந்து சிலைக் கடத்தல் நடைபெற்று வந்தன. அதனைத் தடுக்கவும், மேலும் திருடு போன சிலைகளை மீட்டு எடுக்கவும் சிலை கடத்தல் தடுப்பு ஐஜியாக பொன் மாணிக்கவேல் அவர்களை நியமித்தது தமிழக அரசு.

Advertisment

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவிற்கு தேவையான அனைத்து  உதவிகளையும் மாநில அரசு அவருக்கு செய்து தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கான காலக்கெடு முடியும் வரை, மாநில அரசு, அந்த உதவிகளை செய்ய மறுத்ததுடன், சிலைக்கடத்தல் பிரிவில் செயல்பட்டு வரும் அதிகாரிகள் அனைவரையும் பணியிடம் மாற்றி உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து பொன் மாணிக்கவேல் அவர்களின் புகாரின் பேரில் விசாரணையை மேற்கொண்ட நீதிபதி ஆர்.மகாதேவன் , உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமித்த அதிகாரிகளை மாற்றும் உரிமை இங்கு யாருக்கும் கிடையாது என்றும், இந்நிலை நீடிக்கும் பட்சத்தில் டிஜிபி நேரில் வந்து விளக்கம் கூற வேண்டும் என்று கூறினார்.

மேலும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் கேட்கும் உதவிகள் அனைத்தையும் தமிழக அரசு செய்து தரவில்லை எனில் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் எச்சரிக்கை செய்திருந்தார்.

சிலைக் கடத்தல் வழக்கு - சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு

ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு என்ற இரண்டு சிறப்பு நீதிபதிகள் தான் சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்து வருகிறார்கள்.

சிலைக் கடத்தல் தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன். மாணிக்கவேல் அவர்களின் செயல்பாட்டில் தமிழக அரசிற்கு உடன்பாடில்லை. அவர் தனித்து செயல்படுகிறார் எனவே சிலைக் கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞர் கூறினார்.

இதற்கான தமிழக அரசின் அரசாணையை வெளியிட்டனர். பின்னர், இது தொடர்பாக மத்திய அரசிற்கு கடிதம் ஒன்றும் எழுதப்பட்டது. இதனைப் பார்த்த மத்திய அரசு, சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற முடியாது என்று கிரிஜா வைத்தியநாதனுக்கு பதில் கடிதம் அனுப்பியிருக்கிறது.

தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப் பற்றிய செய்தியைப் படிக்க 

மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் எதையும் சமர்பிக்காமல் வெறும் கடிதம் மட்டுமே அனுப்பியுள்ளது மத்திய அரசு. எனவே முறையான ஆவணங்களை சமர்பிக்கும் பட்சத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

Pon Manikavel Idols
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment