Advertisment

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிகளுக்காக மூடல் - தொழிற்சாலை நிர்வாகம் அறிவிப்பு.

ஸ்டெர்லைட் தொழிற்சாலை பராமரிப்பு பணிகளுக்காக 15 நாட்கள் மூடப்படும் என்று ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் உற்பத்தி நிறுத்தம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஸ்டெர்லைட் காப்பர் ஆலை, தூத்துக்குடி, வேதாந்தா குழுமம், ஸ்டெர்லைட் ஆலை

Thoothukudi, Sterlite, Tamilnadu Government, Order To Close

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையைத் தடை செய்யக் கோரி மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 1996ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஆலை, மூலப்பொருளாகத் தாமிரம் (காப்பர்) உற்பத்தி செய்து வருகிறது.

இந்த ஆலையில் இருந்து நச்சுப் புகை வெளியேறுவதால் தூத்துக்குடியில் பலர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். எனவே இந்த ஆலையைத் தடை செய்ய வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். இப்போராட்டம் கடந்த ஒரு வாரக் காலமாக தீவிரம் பெற்றுள்ளது. குழந்தைகள் முதல் முதியோர் வரை இதில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாகக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை புரக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது போராட்டம் உச்சத்தை அடைந்து வரும் நிலையில், பராமரிப்பு பணிகளுக்காக ஆலையை 15 நாட்கள் மூடப்போவதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

Sterlite Copper Industries
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment