Advertisment

பதைபதைக்க பலியான சுபஸ்ரீ வீடியோ: நெட்டிசன்கள் காட்டம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுபஸ்ரீ மரணம் - மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஐகோர்ட் கேள்வி

சுபஸ்ரீ மரணம் - மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஐகோர்ட் கேள்வி

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த 22 வயதாகும் சுபஸ்ரீ பொறியியல் பட்டதாரி ஆவார். கந்தன் சாவடியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். எப்போதும் போல் வேலை முடிந்து நேற்று மாலை பள்ளிக்கரணை வழியாக தனது வீடு உள்ள குரோம்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.

Advertisment

அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று காற்றில் பறந்து வந்து சுபஸ்ரீ மீது விழுந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத சுபஸ்ரீ நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது திடீரென அந்த வழியே வேகமாக வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது மோதி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சுபஸ்ரீ விபத்தில் சிக்கிய காட்சிகளை தற்போது காவல்துறை வெளியிட்டு வருகிறது. பேனர் விழுந்தவுடன் அதிர்ச்சியில் ஸ்கூட்டர் நிலை தடுமாறி சாலையில் சுபஸ்ரீ விழுகிறார். இதையடுத்து பின்னல் வந்த லாரி ஏறியதால் சுபஸ்ரீ உயிர் பிரிந்தது.

பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ - நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

இந்த வீடியோ வெளியானதில் இருந்தே, சமூக தளங்களில் பலரும் ஆக்ரோஷமாகவும், வேதனையுடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

13, 2019

13, 2019

13, 2019

13, 2019

13, 2019

13, 2019

13, 2019

13, 2019

இவ்வாறாக பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment