Advertisment

கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸ் வழக்கு: உச்ச நீதிமன்றம் பிற்பகலில் விசாரணை

கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸ் தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு மீது, உச்ச நீதிமன்றம் இன்று பிற்பகலில் விசாரணை நடத்தவுள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸ் வழக்கு: உச்ச நீதிமன்றம் பிற்பகலில் விசாரணை

கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸ் தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், அதன் மீது இன்று பிற்பகலில் விசாரணை நடத்தவுள்ளது.

Advertisment

மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜியின் "ஐஎன்எக்ஸ் மீடியா" நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத் தருவதற்காக மொரிஷியஸில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக அவரது வீடு உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்களின் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் தேவையான ஆவணங்களுடன் ஜூலை 21-ம் தேதியன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு இரண்டாவது முறையாக சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாத கார்த்தி சிதம்பரம், அந்த சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இதனிடையே, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக (அவரை தேடப்படும் நபராக அறிவித்து) அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸை சிபிஐ அறிவுறுத்தலின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் குடியுரிமை அலுவலகம் கடந்த ஜூலை 18-ம் தேதி பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்குத் தொடர்ந்தார். அதன் மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், கார்த்தி சிதம்பரம் மற்றும் நால்வர் மீதான லுக் அவுட் நோட்டீஸுக்கு செப்டம்பர் 4-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மெஹ்தா கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொன்ட தலைமை நீதிபதி ஜெ.எஸ்.ஹெகர் மற்றும் நீதிபதி சந்த்ரகூட் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டதுடன், இன்றைய தினம் பிற்பகலில் இந்த மனு மீதான விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

P Chidambaram Karti Chidambaram Inx Media Peter Mukerjea Indirani Mukerjea
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment