தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் விஜய். ரஜினிக்கு இணையாக இவரது திரைப்படங்கள் வசூல் செய்து வரும் நிலையில், குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை அனைத்து தரப்பிலும் ரசிகர்களை பெற்றுள்ளார். நடிப்பு மட்டுமல்லாது தனது மக்கள் இயக்கம் சார்பில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நடிகர் விஜய் அவ்வப்போது அரசியல் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.
இவரது நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு தயாரான வேலாயுதம் மற்றும் 2013-ம் ஆண்டு தயாரான தலைவா ஆகிய இரு படங்களும் பெரும் அரசியல் சர்ச்சைகளை சந்தித்து தமிழகத்தில் வெளியாக முடியாத நிலை ஏற்பட்டு, பல தடைகளை கடந்து வெளியானது. ஆனாலும் இந்த இரண்டு படங்களும் விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தும் படங்களாகவே அமைந்தது. மேலும் கத்தி படத்தில் இவர் பேசிய க்ளைமேக்ஸ் வசனம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இப்படி பலமுறை அரசியல் சர்ச்சைகளை சந்தித்த விஜய் கடந்த ஆண்டு தனது அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் புது சர்ச்சையை சந்தித்தார். நடிகர் விஜய் பெயரில் புதிய அரசியல் கடசியை அவரது அப்பா தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் உடனடியாக இது தொடர்பாக அறிக்கை விட்ட விஜய், தனது அப்பா தொடங்கிய கட்சிக்கும் தனதுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும், அக்கட்சியின் அரசியல் முடிவுகள் தன்னை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 6-ந் தேதி தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டவே நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார் என கூறப்பட்ட நிலையில், வாக்கு மையத்தில் பார்கிங் வசதி இல்லாத்தால் சைக்கிளில் வந்ததாக விஜய் தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க தற்போது விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வரும் ஜூன் 22-ந் தேதி விஜய் தனது 47-வது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், இந்த நாளை விமாசையாக கொண்டஎண்ணிய விஜய் ரசிகர்கள் அதற்கான பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். விஜய் பிறந்த நாளுக்கான காமன் புகைப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும் கொரோனா தொற்றும் அதிகரிக்கும் இந்த சமயத்தில் விஜயின் மக்கள் இயக்கம் மக்களக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வருவதை குறிப்பிட்டு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளனர்.
அந்த போஸ்டரில், தலைமை செயலகத்தின் முன்னிலையில், தற்போதைய முதல்வர் மு.கஸ்டாலின் விஜய் கையில் செங்கோலை வழங்குவது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும் ஏழை எளிய மக்களுக்கு நல்லாட்சி வழங்கிட தம்பி வா தலைமை ஏற்க வாசகமும் இடம்பெற்றுள்ளது. திண்டுக்கள் மாவட்டம் மணிக்கூண்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், திமுகவினரிடம் இந்த பொஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.