Advertisment

சைக்கிள் சின்னம் யாருக்கு ? தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

சைக்கிள் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக 8 வாரத்தில் மறுப்பரிசீலனை செய்ய  தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Maanila Congress Party Logo issue

Tamil Maanila Congress Party Logo issue

Tamil Maanila Congress Party Logo issue : ஜி கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ( மூப்பனார்) கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க மறுத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1996 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் பி. வி. நரசிம்ம ராவ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார்.

Advertisment

Tamil Maanila Congress Party Logo issue

இந்த முடிவுக்கு தமிழக காங்கிரஸ்  உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள்  எதிர்ப்பு தெரிவித்து ஜி.கே. மூப்பனார் தலைமையில் பிரிந்து சென்று “தமிழ் மாநில காங்கிரஸ்” என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார்.  தமாகா 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 39 இடங்களில் வெற்றி பெற்றது. இத்தேர்தலுடன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் இணைந்து போட்டியிட்டு 20 இடங்களில் வென்றது.

2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகக் கூட்டணியில் இடம்பெற்று 23 இடங்களில் வென்றது.   2001ல் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி. கே. வாசன் தமாகா தலைவரானார்.   2002ல் தமாகா இந்திய தேசியக் காங்கிரசுடன் இணைந்து  செயல்பட்டது. இதனிடையே

காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு விலகியதால் ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை மீண்டும் தொடங்கினார்.

அதன் காரணமாக  சைக்கிள் சின்னத்தை தங்கள் கட்சிக்கு வழங்க கோரிக்கை வைக்கப்பட்ட போது அதை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதையடுத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தாமாக தென்னைந் தோப்பு சின்னத்தில் போட்டியிட்டது.  இந்நிலையில் தங்களுடைய கட்சிக்கு  சைக்கிள் சின்னம் ஒதுக்க  தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ராஜா முன் விசாரணைக்கு வந்தபோது, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில்  கட்சி தொடங்கி ஆறு ஆண்டுகள் இருக்க வேண்டும், போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என விதி இருப்பதால் சைக்கிள் சின்னத்தை தமிழ் மாநில காங்கிரசுக்கு வழங்க இயலாது  என வாதிடப்பட்டது.

தங்கள் கட்சி கலைக்கப்படவில்லை. இந்த சின்னம் முடக்கப்படவும் இல்லை. ஏற்கனவே சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம்.. புதிய தேர்தல் விதிகள் படி ஏற்கனவே இருந்த கட்சி 6 ஆண்டுகள் பிறகு  ஏற்கனவே போட்டியிட்ட சின்னத்தை உரிமை கோரினால் அதே சின்னத்தை வழங்கலாம் என விதி உள்ளதாக தாமாக சார்பில் மூத்த வழக்கறிஞர் ஞானதேசிகன் வாதடினார்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ் மாநில காங்கிரஸ் (( மூப்பனார்)) கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க மறுத்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தார். மேலும், சைக்கிள் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக 8 வாரத்தில் மறுப்பரிசீலனை செய்ய  மாநில தேர்தல் ஆணையத்திற்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு  உத்தரவிட்டார்.

மேலும் படிக்க : தமிழகத்தில் பொது இடங்களில் பேனர் வைக்கத் தடை விதித்த உயர் நீதிமன்றம்

Madras High Court G K Vasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment