Advertisment

சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி நிறைவு - 3 நாட்கள் சபை நடவடிக்கை என்னென்ன?

Tamil nadu assembly live updates : தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் இன்று துவங்குகிறது. சட்டசபை நடவடிக்கைகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu assembly live today updates : சட்டசபை கூட்டத்தொடர்

Tamil Nadu Assembly Session : ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இன்று துவங்கும் தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!<>/strong

புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சட்டசபை இன்று காலை 10.00 மணிக்கு கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்த உள்ளார். கவர்னர் உரை நிகழ்த்திய பின் சபை நிகழ்ச்சிகள் நிறைவடைய உள்ளன. அதன்பின் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. இதில் கவர்னர் உரை மீது விவாதம் நடத்த எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். ஜன. 10ம்தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றும்படி அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அதே நேரம் இந்த கூட்டத் தொடரை பயன்படுத்தி முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டுகிறது.

Live Blog

Tamil nadu assembly live updates : தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் இன்று துவங்குகிறது. சட்டசபை நடவடிக்கைகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்



























Highlights

    15:56 (IST)06 Jan 2020

    டெல்லி சட்டப்பேரவை - பிப்ரவரி 8 தேர்தல்

    டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறும்

    - தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

    14:35 (IST)06 Jan 2020

    3 நாட்கள் சபை நடவடிக்கைகள் என்னென்ன?

    நாளை காலை 10 மணிக்கு மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். இதன் பிறகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை கூடக்கூடிய ஒவ்வொரு நாட்களிலும் காலை 10 மணிக்கு அவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். அதில் சட்டமன்ற உறுப்பினர் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் தனபால், புதன்கிழமை மதியம் வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. அன்றைய விவாதத்தில்  எதிர்க்கட்சித் தலைவர் பேசுவார். அதனைத் தொடர்ந்து கடைசி நாளான வியாழக்கிழமை அன்று முதல்வர் பதிலுரை, சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும்

    14:34 (IST)06 Jan 2020

    ஒருநாள் முன்னதாகவே நிறைவடையும் சட்டசபை கூட்டத்தொடர்

    ஜனவரி 10ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருநாள் முன்னதாகவே கூட்டத்தொடர் நிறைவடைய உள்ளது. 

    தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் பன்வாரிலால் உரையுடன் இன்று துவங்கியது. கவர்னர் உரையை தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக பேசிய சபாநாயகர் தனபால், வரும் 9ம் தேதி வரை தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    13:03 (IST)06 Jan 2020

    சட்டசபை நடவடிக்கைகள் என்னென்ன?

    ஜனவரி 9ம் தேதி வரை நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரில், இரண்டு நாட்கள் கவர்னர் உரை மீதான விவாதமும், ஒருநாள் பதிலுரையும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    12:48 (IST)06 Jan 2020

    ஜனவரி 9ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் துவங்கிய சட்டசபை கூட்டத்தொடரை, வரும் 9ம் தேதி வரை நடத்த சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    12:08 (IST)06 Jan 2020

    திறமையான நிதி மேலாண்மைக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம்

    மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியின் அளவு குறைந்துள்ளது. இருந்தபோதிலும், திறமையான நிதி மேலாண்மைக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    11:56 (IST)06 Jan 2020

    மீனவர்கள் விவகாரத்தில் தீர்வு - கவர்னர்

    தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு சுமூக தீர்வு காணவேண்டும் என்று கவர்னர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    11:26 (IST)06 Jan 2020

    தமிழகத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பு

    தமிழகத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் 917ல் இருந்து 943ஆக அதிகரித்துள்ளது. 

    ஆபத்தில் இருந்து பெண்களை பாதுகாக்க தொடங்கப்பட்ட காவலன் செயலி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    11:13 (IST)06 Jan 2020

    இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை

    இலங்கைத்தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்க மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும் என்று கவர்னர் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

    10:48 (IST)06 Jan 2020

    முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு

    சர்வதேச அளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்வதாக, கவர்னர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

    10:26 (IST)06 Jan 2020

    மக்களின் நலன் பாதுகாக்கப்படும் - கவர்னர் உரையில் தகவல்

    தமிழக மக்கள் எந்த மதம் மற்றும் சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் நலன் பாதுகாக்கப்படும். இலங்கைத்தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்க மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுமண்டபம் விரைவில் கட்டிமுடிக்கப்படும். கோதாவரி ஆற்றில் இருந்து குறைந்தது 200 டிஎம்சி நீரையாவது வழங்க, மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். காவிரி ஆற்றின் தூய்மையை பாதுகாக்கும் பொருட்டு, முதல்வர் பழனிசாமி, "நடந்தாய் வாழி காவிரி" என்ற திட்டத்தை துவக்கியுள்ளார் என்று கவர்னர் புரோகித் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

    10:13 (IST)06 Jan 2020

    தினகரன் வெளிநடப்பு

    கவர்னர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு தெரிவித்துள்ள நிலையில் அமமுகவின் தினகரன், தமீமுன் அன்சாரி உள்ளிட்ட எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்துள்ளனர்.

    10:11 (IST)06 Jan 2020

    கவர்னர் உரையால் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை : ஸ்டாலின்

    கவர்னர் உரை ஒரு சம்பிரதாய நடைமுறையே, இந்த உரையால் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை.  ராஜிவ் கொலையாளிகள் விவகாரத்தில் கவர்னர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை, குடியுரிமை விவகாரத்தில் இலங்கை தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.  குடியுரிமை விவகாரம் தொடர்பாக திமுக எம்எல்ஏக்கள் பேச அனுமதிக்கப்படவில்லை உள்ளிட்டவைகளை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளதாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    10:07 (IST)06 Jan 2020

    கவர்னர் உரையை எதிர்த்து திமுக வெளிநடப்பு

    கவர்னர் உரை துவங்குவதற்கு முன்னதாக  குடியுரிமை சட்டம் குறித்து விவாதம் நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு கவர்னர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுக வெளிநடப்பு செய்துள்ளது

    10:05 (IST)06 Jan 2020

    சட்டசபை கூட்டம் துவங்கியது

    புத்தாண்டின் முதல் சட்டசபை கூட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் துவங்கியது. உரையின் துவக்கத்தில், புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களை கவர்னர் புரோகித் தெரிவித்துக்கொண்டார். 

    09:52 (IST)06 Jan 2020

    டிடிவி தினகரன் வருகை

    சட்டசபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகை தந்துள்ளார்.

    09:45 (IST)06 Jan 2020

    கறுப்புச்சட்டையில் எம்எல்ஏக்கள்

    எம்எல்ஏக்கள் அபுபக்கர், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புச்சட்டை அணிந்து சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள வருகை தந்துள்ளனர்.

    09:44 (IST)06 Jan 2020

    சட்டசபைக்கு ஸ்டாலின் வருகை

    சட்டசபை கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் காமராஜ், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர்.

    09:29 (IST)06 Jan 2020

    புதிய மாவட்டங்கள் குறித்து அறிவிப்பு - எதிர்பார்ப்பு

    சேலம் மாவட்டம் இடைப்பாடி; கோவை மாவட்டம் பொள்ளாச்சி; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆகியவற்றை தலைமையிடமாக்கி மூன்று புதிய மாவட்டங்கள் துவக்குவதற்கான அறிவிப்புகளையும் முதல்வர் பழனிசாமி வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    08:52 (IST)06 Jan 2020

    சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவக்கம்

    புத்தாண்டின் முதல் சட்டசபை கூட்டம் என்பதால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்த உள்ளார். இந்த உரையில்  பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    Tamil Nadu Assembly Session Today News:  தமிழ்நாடு சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை முறைப்படுத்துதல் திருத்த அவசர சட்டம் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள், ஊராட்சிகள் திருத்த அவசர சட்டம். மேலும் வேளாண் விளை பொருள் சந்தைப்படுத்துதல், ஜி.எஸ்.டி. திருத்த அவசர சட்டம் போன்ற மசோதாக் களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது; அ.தி.மு.க. பல இடங்களில் சரிவை சந்தித்துள்ளது. எனவே இதுகுறித்த அனல் பறக்கும் விவாதங்கள் சபையில் நடக்க வாய்ப்புள்ளது.

    Tamil Nadu Dmk Admk Tamilnadu Assembly Governor Banwarilal Purohit
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment