Advertisment

Tamil Nadu news today updates : மோடி, அமித்ஷா பற்றி சர்ச்சை பேச்சு: பெரம்பலூரில் நெல்லை கண்ணன் கைது

Petrol Diesel Price Chennai : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.12க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ.71.86 ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today updates : மோடி, அமித்ஷா பற்றி சர்ச்சை பேச்சு: பெரம்பலூரில் நெல்லை கண்ணன் கைது

Tamil Nadu breaking news today live updates Tamil Nadu weather : தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மேலும் நான்கு நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.  சென்னையில் நேற்று மாலை முதல் ஆங்காங்கே சாரல் மழை பெய்து கொண்டிந்தது. ஆனால் இன்று காலை முதல் சென்னையில் பலத்த கனமழை பெய்ய துவங்கியது. இடைவிடாது பெய்த மூன்று மணி நேர மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கத்திற்கு இயல்பாக இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைவான மழைப்பொழிவை பெற்றிருந்தது சென்னை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த ஆண்டில் தமிழ் திரையுலகம் இழந்த நட்சத்திரங்கள்

மோடி வாழ்த்து

புத்தாண்டு தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Live Blog

Tamil Nadu breaking news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

 



























Highlights

    22:25 (IST)01 Jan 2020

    மோடி, அமித்ஷா பற்றி சர்ச்சை பேச்சு: பெரம்பலூரில் நெல்லை கண்ணன் கைது

    பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, நெல்லை கண்ணன் உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், நெல்லை கண்ணன் பெரம்பலூரில் ஒரு தனியார் ஓட்டலில் இருந்தபோது பெரம்பலூர் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின்னர் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    20:47 (IST)01 Jan 2020

    பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறு பேசியதாக நெல்லை கண்ணன் கைது

    பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் அவரை பெரம்பலூரில் கைது செய்துள்ளனர்.

    19:56 (IST)01 Jan 2020

    டிசம்பர் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.03 லட்சம் கோடி - மத்திய நிதி அமைச்சகம்

    மத்திய நிதி அமைச்சகம், கடந்த டிசம்பரில் ஜி.எஸ்.டி., வரி வசூல், ரூ.1,03,184 கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி.,(CGST) ரூ.19,962 கோடி, மாநில ஜி.எஸ்.டி.,(SGST) ரூ.26,792 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.,(IGST) (இறக்குமதி வரி ரூ.21,295 கோடி உள்பட) ரூ.48,099 கோடி, 'செஸ்' வரி(cess) ரூ.8,331 கோடி வசூலாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2018 டிசம்பருடன் ஒப்பிடும் போது, 2019 டிசம்பரில் ஜி.எஸ்டி. வருவாய் 16% அதிகரித்துள்ளது. 2019-20 நிதியாண்டில், நவம்பர்30ம் தேதி நிலவரப்படி, ஜி.எஸ்.டி., வரி, அதிகமாக வசூலான மாநிலங்களில் தமிழகம் 4வது இடம்.

    கடந்த நவம்பரில் ரூ.1,03,492 கோடியும் டிசம்பரில் ரூ.1,03,184 கோடியும் வசூலானதையடுத்து அடுத்தடுத்த இரு மாதங்களில், ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது.

    19:17 (IST)01 Jan 2020

    நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி தர்ணா செய்த பாஜகவினர் 308 பேர் மீது வழக்குப்பதிவு

    பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி சென்னை மெரினாவில் பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெ.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 308 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    19:00 (IST)01 Jan 2020

    பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து நெல்லை கண்ணன் பேசிய வார்த்தை தவறானது - வைகோ

    செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது. இந்த விளைவுகளை பாஜக நினைக்கவில்லை. நெல்லை கண்ணன் பேசிய வார்த்தை தவறானது. அதை பயன்படுத்தி இருக்க கூடாது. ஆனால், அந்த நோக்கத்தில் பேசியிருக்க மாட்டார் என்று கூறினார்.

    18:33 (IST)01 Jan 2020

    ஏற்கனவே போட்ட கோலத்தில் ‘NO CAA' என எழுதியுள்ளனர் - போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன்

    சென்னை போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன்: கோலம் போட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை; ஏற்கனவே போட்ட கோலத்தில் ‘NO CAA' என எழுதியுள்ளனர். வீட்டின் உரிமையாளர் ஏன் இப்படி எழுதுகிறீர்கள் எனக்கேட்ட போது முழக்கம் எழுப்பியதால் கைது செய்யப்பட்டனர்.

    18:00 (IST)01 Jan 2020

    உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி மனு; அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கக்கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    நகர்ப்புறங்களில் தேர்தல் நடத்தாமல் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

    17:38 (IST)01 Jan 2020

    ஓமலூர் அருகே வெள்ளக்கல் பட்டி ஊராட்சி தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு

    சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்ற தேர்தலில், ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜா என்பவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத‌தால் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

    16:59 (IST)01 Jan 2020

    நெல்லை கண்ணனைக் கைது செய்யக் கோரி பாஜக தர்ணா; பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா கைது

    பிரதமர் பற்றி அவதூறாக பேசிய விவகாரத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன் பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு மயிலாப்பூரில் உள்ள சமூக நல கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    16:19 (IST)01 Jan 2020

    டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலையில் சார்பு துணை வேந்தர் நியமனம்

    டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் (ஜே.எம்.ஐ) சார்பு துணைவேந்தராக பேராசிரியர் இலியாஸ் ஹுசைன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜே.எம்.ஐ.யில் கல்வியியல் ஆய்வுகள் துறையில் பேராசிரியராக உள்ளார்.

    15:52 (IST)01 Jan 2020

    ரயில் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை - பாமக ராமதாஸ்

    பாமக நிறுவனர் ராமதாஸ்: 5 ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்த்தப்படாதது மற்றும் இயக்கச் செலவுகள் அதிகரிப்பு காரணங்களால் ரயில் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் தூய்மை என்பது பெரும் பற்றாக்குறையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    15:35 (IST)01 Jan 2020

    ரூபாய் நோட்டுகளின் மதிப்பை அடையாளம் காண புதிய ஆப்; ஆர்.பி.ஐ ஆளுநர் அறிமுகம்

    இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) ஆளுநர் சக்தி காந்த தாஸ், ரூபாய் நோட்டுகளின் மதிப்பை அடையாளம் காண பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக MANI என்ற மொபைல் ஆப்பை இன்று அறிமுகப்படுத்தினார். இந்த ஆப்பை Android Play Store & iOS App Store-ல் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

    15:30 (IST)01 Jan 2020

    விஜய் மல்லையாவின் சொத்துக்களை ஏலம்விட வங்கிகளுக்கு நீதிமன்றம் அனுமதி

    இந்திய வங்கிகளில் கடன் வாங்கி, அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை ஏலம் விட வங்கிகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி வரை கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா, தற்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    14:49 (IST)01 Jan 2020

    இந்திய ராணுவம் சீன எல்லையில் அதிக கவனம் செலுத்தும்: தளபதி எம்.எம்.நரவணே

    இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் எம்.எம். நரவணே செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

    டெல்லியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய எம்.எம்.நரவணே: "சீன எல்லையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எந்த விதமான சூழலிலும் நாட்டை காக்கும் பணியில் ராணுவத்தை தயார் நிலையில் வைப்பதே தமது திட்டம். தமது பதவிக்காலத்தில் ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மனித உரிமைகள் மீறப்படாமல் இருக்க ராணுவம் அறிவுறுத்தப்படும். பாகிஸ்தான் எல்லைப்புற பதற்றம் ஒரு புறம் இருந்தாலும் இனிமேல், இந்திய ராணுவம் சீன எல்லையில் அதிக கவனம் செலுத்தும்” என்று கூறினார்.

    13:41 (IST)01 Jan 2020

    சிலிண்டர் விலை உயர்வு

    மானியம் இல்லாத கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 19 வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 

    13:32 (IST)01 Jan 2020

    நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்

    நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் உடனே போராட்டம் வெடிக்கும் என்று பாஜக தலைவர் ஹெச்.ராஜா பேச்சு

    13:22 (IST)01 Jan 2020

    முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்துகள்

    முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார். ராணுவத்தில் செய்யப்பட்ட மிக முக்கியமான சீர் திருத்தம் தான் முப்படை தளபதி என்றும் எதிர்காலத்தில் வரும் சவால்களை சமாளிக்க இந்த சீர் திருத்தம் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    12:53 (IST)01 Jan 2020

    விண்வெளிக்கு அனுப்ப 4 வீரர்கள் தேர்வு

    ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்ப 4 வீரர்கல் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு வரும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் இருந்து பயிற்சி அளிக்கப்படும் என்றும் சிவன் அறிவித்துள்ளார். சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றும் அதற்கான திட்டப்பணிகள் துவங்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளார் அவர்.

    12:51 (IST)01 Jan 2020

    வானிலை அப்டேட்

    தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    12:18 (IST)01 Jan 2020

    உப்புக்கோட்டை, நாலுமாவடியில் மறுவாக்குப்பதிவு

    டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சீட்டு குளறுபடி காரணமாக தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் மீண்டும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேனியின் உப்புக்கோட்டை ஊராட்சியின் 8வது வார்டிலும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    12:00 (IST)01 Jan 2020

    நீட் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

    நீட் தேர்வுக்கு நேற்று வரை மட்டும் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், நேற்று இணையத்தில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்வது பெரும் சவாலாக அமைந்தது. அதனை தொடர்ந்து நீட் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 6ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    11:43 (IST)01 Jan 2020

    டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுகள்

    டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கு தேர்வர்கள் வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி மாதம் 19ம் தேதி ஆகும். இதன் முதல்நிலை தேர்வு ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    11:22 (IST)01 Jan 2020

    ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு நீர் திறப்பு

    கோவையின் ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு 6400 ஏக்கர் பாசன நிலங்களுக்கு வருகின்ற 160 நாட்கள் நீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    11:04 (IST)01 Jan 2020

    இந்திய ராணுவத்தில் அரசியல் தலையீடு இல்லை

    இந்திய ராணுவத்தில் அரசியல் தலையீடு இல்லை என்றும் அரசின் உத்தரவின் பேரில் தான் செயல்படுகின்றோம் என்றும் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பேச்சு. இனிமேல் ராணுவ நடவடிக்கைகளில் மூன்று படைகளும் இணைந்து செயல்படும் என்றும் அந்த ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பிபின் ராவத் அறிவித்துள்ளார். தேசிய போர் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.

    11:00 (IST)01 Jan 2020

    நீலகிரி தேயிலை தொழிற்சாலைகள் உரிமம் ரத்து

    நீலகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் 8 தொழிற்சாலைகளுக்கு தென்னிந்திய தேயிலை வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தரமற்ற , கலப்பட தேயிலைகளை தயாரித்தது காரணமாக இரண்டு தொழிற்சாலைகளுக்கு நிரந்திரமாக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்றொன்றுக்கு தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    11:00 (IST)01 Jan 2020

    டெல்லியில் கடும் குளிர்

    டெல்லியில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. தற்போது 2.4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவுவதால் இயல்பு நிலை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    11:00 (IST)01 Jan 2020

    மேட்டூர் அணை நீர் மட்டம்

    மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 118.6 அடியாக உள்ளது. நீர் இருப்பு 91.3 டிம்.எம்.சி ஆகும். நீர் வரத்து 1,926 கன அடியாக உள்ளதூ. நீர் திறப்பு 10,600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    10:59 (IST)01 Jan 2020

    முக ஸ்டாலின் அண்ணா & கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று திமுக தலைவர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொருளாளர் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.

    Tamil Nadu breaking news today updates : நேற்று நள்ளிரவு  முதல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களைகட்டி வருகிறது. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகள் நேற்று சென்னை மாநகரம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 15 ஆயிரம் காவல்துறையினர் மாநகரம் முழுவதும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இது தொடர்பான முழுமையான தகவல்களைப் பெற இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்

    சி.ஏ.ஏவுக்கு எதிராக கேரளா மாநில சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். இதனை ஆதரிப்பதாக அறிவித்திருந்த தமிழக எதிர்கட்சித் தலைவர் மற்றும் திமுக தலைவருமான முக ஸ்டாலின், இதே போன்று வருகின்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    Mk Stalin Happy New Year
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment