50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குளை இயக்க தமிழக அரசு வெளியிட்ட அரசானை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள மீறும் செயலாகும்.
பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் மாநிலங்களும்/ யூனியன் பிரதேசங்களும் எந்த வகையிலும் நீர்த்துப்போகச் செய்ய கூடாது என்று தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது.
முன்னதாக, திரைத்துறையினரின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவுக்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட திரைப்பட துறையினரின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த தளர்வு அனுமதிக்கப்படுவதாகவும் கூறினார்.