Advertisment

மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு – முதல்வர் அறிவிப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு, அவர்களின் நலனில் அரசு உறுதியாக உள்ளதாக வலியுறுத்தல்

author-image
WebDesk
New Update
Tamil news today live: சிவந்தி ஆதித்தனார் தலைமையில் தென்காசி கோயில் திருப்பணி - முதல்வர் ஸ்டாலின்

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அறிவித்தார். மேலும், அனைத்து தரப்பு மக்களின், குறிப்பாக, ஒதுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக தனது அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

Advertisment

அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் யாருடைய ஆதரவுமின்றி சுதந்திரமாக பணிபுரியும் தொழில்நுட்ப அடிப்படையிலான கட்டமைப்பை வழங்குவதில் மாநில அளவிலான நிபுணர்கள் மற்றும் உயர்மட்டக் குழுக்கள் செயல்பட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இதையும் படியுங்கள்: திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவசரப்பட்டு கைது செய்யக் கூடாது – டி.ஜி.பி

“மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு வசதியாக ஒரு சூழலை நாங்கள் உருவாக்கப் போகிறோம், ”என்று அரசாங்கத்தால் நடத்தப்பட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டத்தின் போது தனது உரையில் ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் அவர்களின் திறன்களை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை வழங்கவும் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும் இந்த திட்டம், தொடர்புடைய மென்பொருள்களுடன் கூடிய மடிக்கணினிகளை வழங்குவதை உள்ளடக்கியது. இந்த முயற்சியானது ‘நான் முதல்வன்’ மாநில திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளது, என்று ஸ்டாலின் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமத்தையும் சந்திக்காமல் இருக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள். ஒரு மாற்றுத்திறனாளிக்கு கூட எந்த குறையும் இருக்கக்கூடாது என்றும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு மட்டும் நன்மை பயக்கும் முயற்சியாக இருந்தாலும், அதை செய்ய வேண்டும், என்றும் ஸ்டாலின் கூறினார்.

வருவாய்த் துறையின் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியம், பார்வையற்றோர் உட்பட 4,39,315 மாற்றுத் திறனாளிகளுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். இந்த நடவடிக்கையால் ஆண்டுக்கு ரூ.263.58 கோடி கூடுதல் செலவாகும்.

மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரைக்கு எளிதில் செல்ல சென்னை மாநகராட்சி அமைத்த பிரத்யேக பாதையை அவர் குறிப்பிட்டார். இது அவர்களின் உரிமை, அது அரசின் அன்பின் பாதை, என்று கூறினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் மற்றும் அவர்களுக்கு தடையில்லா அணுகலை வழங்குவது வீட்டிலிருந்தே தொடங்குகிறது (அணுகக்கூடிய வீடு). இயலாமை என்பது மனித உடலைப் பொறுத்ததே தவிர, அவர்களின் அறிவுத்திறன் அல்லது திறமையைப் பற்றியது அல்ல.

பாராலிம்பிக் சாம்பியன் மாரியப்பன் தங்கவேலு உட்பட பல்வேறு மாற்றுத்திறனாளிகளின் ஊக்கமளிக்கும் கடின உழைப்பை அவர் மேற்கோள் காட்டினார்.

அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக மாநில அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது, குறிப்பாக விளிம்புநிலை மற்றும் அவர்களின் தேவைகளை நிறைவேற்ற அரசு தொடர்ந்து பணியாற்றும் என்று முதல்வர் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் என்ற தமிழ் சொல்லை உருவாக்கி, புதிய நம்பிக்கையை அளித்து, அவர்களின் நலனுக்காக தனித் துறையை உருவாக்கி, அந்தத் துறையையும் தன் தந்தையும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியே கையாண்டு வந்ததாக நினைவுக் கூர்ந்த ஸ்டாலின், அவரைப் போலவே தற்போது தானும் அந்த துறையை வைத்திருப்பதாக கூறினார்.

நிகழ்ச்சியில் கீதா ஜீவன் (சமூக நலன்) கே பொன்முடி (உயர்கல்வி) உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment