Advertisment

தமிழகத்தில் 5,986 பேருக்கு கொரோனா : 116 பேர் பலி

author-image
salan raj
New Update
tamil nadu daily coronavirus report, today covid-19 positive cases, new coronavirus cases, tamil nadu total coronavirus deaths

TN Latest News Updates

Corona virus daily News bulletin 20th august தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Advertisment

புது பாதிப்புகள்:  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,986 புதிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின்  மொத்த  எண்ணிக்கை 3,61,435 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைவோர் விகிதம்: கடந்த 24 மணி நேரத்தில்,  தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களில் 5,742-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . இதன் மூலம் கொரோனா நோய்த்  தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,01,913-பேர் அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 83.53 %  சதவீதமாக அதிகரித்துள்ளது.

கொரோனா உயிரிழப்பு:  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பெருந்தொற்றால் 116 பேர் உயிரிழந்தனர். இதுநாள் வரையில், தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,239-ஆக அதிகரித்துள்ளது. அண்டை மாநிலமான  கேரளாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 191 ஆக உள்ளது.

சென்னை நிலவரம்: சென்னையில் இன்று மட்டும் அதிகபட்சமாக  1,177 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம், சென்னை மாநகராட்சியின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,21,450 ஆக அதிகரித்தது. சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12,287 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பின் மாவட்ட வாரியாக விவரம்:

கொரோனா பரிசோதனை:  தமிழகத்தில் இன்று மட்டும் 73,162 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 38,51,411 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக, அதிகப்படியான கொரோனா பரிசோதனை மேற்கொண்ட மாநிலமாக திகழ்ந்த தமிழகத்தை,   உத்தரபிரதேச மாநிலம் தற்போது முந்தியுள்ளது . 40 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா சோதனையை மேற்கொண்டுள்ளது.  இருப்பினும் இவற்றில் பெரும்பாலானவை ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகள் மூலமாகவே செய்யப்பட்டுள்ளன. ஆர்டி பி.சி.ஆர் அடிப்படையிலான   சோதனைகளை தமிழகம் தொடர்ந்து பயன்படுத்துகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment